சேலம், மே 4- மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பி.,க்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு, மாதர், வாலிபர், மாணவர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கே. ராஜாத்தி தலைமை ஏற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர். வெங்கடபதி, வாலிபர் சங்க செயலாளர் பெரியசாமி, தலைவர் ஜெகநாதன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தேவி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி, மாணவர் சங்கத்தின் டார்வின் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.