districts

img

அரசுப் பள்ளிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு: தட்டிக்கேட்ட பொதுமக்களை மிரட்டும் பாஜக நிர்வாகி

திருப்பூர், செப்.9- அரசுப் பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்ததோடு, அது  குறித்து கேட்க சென்ற பொதுமக்களை யும் மிரட்டி வருகிறார் பாஜக நிர்வாகி. இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் வாலிபர் சங்கத்தினர் திங்களன்று மனு அளித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் தெற்கு ஒன்றியத் தலைவர் பிரகாஷ்  மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் சுர்ஜித்  ஆகியோர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜிடம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, திருப்பூர் தெற்கு வட்டம்  சின்னக்காளிபாளையம் அரசு பள் ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைந்துள் ளது. இந்நிலையில், பள்ளியின் அருகில்  குடியிருந்து வரும் செல்வகுமார் என்ற  நபர் தனக்கு பட்டா மூலம் வழங்கப்பட்ட இடத்தினை விட கூடுதலாக அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதுடன், தனது வீட்டின் கழிவ றையை பள்ளி சுற்றுச்சுவரை ஆக்கி ரமித்து கட்டியுள்ளார். இதனால் பள்ளி  வளாகத்திற்குள் துர்நாற்றம் வீசுவது டன், மாணவ, மாணவிகள் கல்வி பயில  சிரமமாகவும் உள்ளது. இது குறித்து செல்வகுமாரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் ஆக்கிரமிப்பினை அகற்ற மறுத்து வருகிறார். அப்படித்தான் கட்டு வேன் உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள் என்று கூறியும், தான் பாரதிய ஜனதா கட்சியில் சுற்றுச்சூழல் பிரிவில்  மாவட்டப் பொறுப்பில் இருப்பதாக கூறி  ஊர் பொதுமக்களை மிரட்டி வருகிறார்.  அரசு இடத்தில் சட்டவிரோதமாக ஆக்கி ரமித்து அரசு பள்ளி செயல்படுவதற்கு இடையூறாக செயல்படுவதோடு அல் லாமல், அதனை தட்டிக் கேட்க சென்ற  ஊர் பொதுமக்கள், சமூக அக்கறை யுள்ளவர்களை தனது செல்வாக்கை பயன்படுத்தி தகாத வார்த்தையால் பேசு வதும், அவர்கள் மீது வன்முறையில் ஈடு பட முயன்று வருகிறார். இவர் மீது தக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். இடை யூறு இன்றி பள்ளி செயல்பட வழிவகை  செய்ய வேண்டும் என கூறப்பட்டுள் ளது.