நாமக்கல், செப்.28- மாவீரன் பகத்சிங் பிறந்தநாளை முன்னிட்டு, வாலிபர் சங்கத்தினர் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள காவேரி ஆர்.எஸ்.சிஐடியு தொழிற்சங்க அலுவலகத்தில், மாவீரன் பகத்சிங் 116ஆவது பிறந்த நாள் விழா நடை பெற்றது. நிகழ்விற்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.லட்சுமணன் தலைமை ஏற்றார். இதில், மாவீரன் பகத்சிங் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத் தப்பட்டது. பள்ளிபாளையம் வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.நவீன், முன்னாள் வாலிபர் சங்கத் தலைவர் எம்.அசோகன், ஆர்.ரவி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் என திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று, மாநிலம் முழுவதும், வாலிபர், மாணவர் சங்கத்தினர் மாவீரன் பகத்சிங்கின் பிறந்த நாள் உறுதியேற்பு நிகழ்வை கடைபிடித்தனர்.