உடுமலை, மே 3 - உடுமலை அருகே கடத்தூரில் மிகப்பெ ரிய கால்நடை சந்தை செயல்பட்டதாக சித்தி ரமேழி நாட்டார் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள் ளது. இப்பகுதியை அகழாய்வு செய்தால் கூடுதல் தகவல்களைப் பெற முடியும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். கரை வழிநாட்டுக் கடத்தூர் பகுதியில் இருந்த இன்றியமையாத கல்வெட்டுகளில் ஒன்று சித்திரமேழி நாட்டார் கல்வெட்டு. சித்ர மேழி நாட்டார் என்பவர்கள் குறிப்பாக வேளாண் தொழிலை மேற்கொண்டவர்கள். இவர்களே பிற தொழில்களிலும் ஈடுபட்டுள் ளனர். குறிப்பாக வணிகம், அறப்பணி, ஊர் நாட்டாமை, போர்த் தளபதி, தட்டான் என பல தொழில்களிலும் பங்கேற்றனர். அதுபோல சித்ரமேழி நாட்டார் பல பகுதிகளில் சைவ, வைணவ, சமண சமயத்திலும் தங்களை இணைத்துக் கொண்டனர். சோழர்கள் காலத்தில் சபை, நகரம், வணிகம் போன்ற குழுக்கள் இருந்தன. உழவுத் தொழில் மேற் கொண்ட குழுக்களை சித்ரமேழி பெரிய நாட் டார் என்று அழைக்கப்பட்டனர். வழக்கமானக் கல்வெட்டில் நிலக் கொடை கொடுத்தது பற்றியும், மக்களிடம் இருந்து பெற்ற ஆயங்கள் பற்றியும், கோயி லுக்காக கொடுத்த நிலக்கொடை பற்றியும் கொடுத்தவர்களின் பெயர்கள் மட்டுமே தாங்கி நிற்கும்.
ஆனால் இந்தக் கல் வெட்டு முழுமையாக மாற்றம் பெற்றுள்ளது. சித்திரமேழி நாட்டார் கல்வெட்டு வேளாண்மை சார்ந்தும், அப்போதிருந்த வணிகம் சார்ந்தும் பேசக்கூடிய ஒரு மிகப் பெரிய கல்வெட்டு ஆகும். இந்த கல்வெட்டு கடத்தூர் பகுதியின் தென்பகுதியில் தற் போதிருக்கும் சுடுகாட்டுப் பகுதிக்கு அருகில், கடத்தூரில் இருந்து தெற்கில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்லும் சாலையின் மேற்பு றத்தில் உள்ளது. சித்திரமேழி என்பது பழங்காலத்தில் உழ வர்கள் ஏர் கலப்பை மற்றும் கால்நடை சார்ந்த குறியீடுகளைத் தாங்கி நிற்கின்றது. இந்த கல் வெட்டில் வில் அம்பு, பூர்ண கும்பம், வாள், முரசு, அரசனின் மேலிருக்கும் வெண் கொற் றக்குடை, வெண்சாமரம், வெண்சங்கு மற் றும் உழவு சார்ந்த கருவிகளும் இந்தக் கல் வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. இதே கடத்தூர் மருதீசர் கோயிலிலும், அருகிலுள்ள கணியூர், சோழமாதேவி, கண் ணாடிப்புத்தூர், கொழுமம் சிவத்தலங்களில் நிலக்கொடை சார்ந்த 85க்கும் மேற்பட்ட கல் வெட்டுகள் உள்ளன. ஆனால் இந்தக் கல் வெட்டு காலத்தால் முந்தைய கல்வெட்டாக இவ்விடத்தில் மிகப்பெரிய ஒரு கால்நடை சந்தை இருந்ததாகவும், அதைச் சுற்றி அகழியாக நீர் அரண் என்ற பாதுகாப்பு இருந்ததால்தான் இந்தக் கடத்தூர் பகுதி யைத் தேர்ந்தெடுத்து கால்நடை மற்றும் வேளாண் வணிகர்கள் பயன்படுத்தியதாக அறிய முடிகிறது. கால்நடைகள், விவசாய விளைபொருள்களுக்கு மிகப்பெரிய அள வில் கடத்தூர் பகுதி செயல்பட்டதும், இவ்வி டத்தில் கோட்டை இருந்ததையும் தொல்லி யல் துறையால் அகழ்வாய்வு செய்தால் இன்னும் பல செய்திகள் கிடைக்கும்.