திருப்பூர், செப். 28 - இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்குழு சார் பில், இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத்சிங் 115 ஆவது பிறந்த தினத்தையொட்டி, கல்லூரிகளில் உறுதிமொழி ஏற்று கொண்டாடப்பட்டது. பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி கிளை துணை தலைவர் ஸ்ரீதேவி தலைமையிலும், திருப்பூர் சிக்கண்ணா கலை அறிவியல் கல்லூரியில் கிளை செயலாளர் சபரி தலைமையிலும், அவிநாசி கலை அறிவியல் கல்லூரி யில் கிளை தலைவர் சஞ்சய் தலைமையிலும் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் பிரவீன் குமார், மாவட்ட துணை செய லாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர்கள் சுஜிதா, சூர்யா ஆகியோரும், மாவட்ட குழு உறுப்பினர்கள் மோகன், உதயராஜ், அனுஷ்யா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.