districts

img

தனியார் கல்லூரியை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்

நாமக்கல், மே 5- மாணவர்களின் சான்றிதழ்களை தரா மல் இழுத்தடித்து வந்த தனியார் கல்லூ ரியை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம்  கொன்னையார் கிராமம் அக்கரபட்டிபாளை யம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ சாய்பாபா பாலிடெக்னிக்  என்ற தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இக் கல்லூரியில் மும்பையைச் சேர்ந்த ஜெகன், விவேக் என்ற இரண்டு மாணவர்கள் மூன்று வருடத்திற்கு முன்பு படித்து முடித்து விட்ட னர். ஆனால், கல்லூரி நிர்வாகம் தற்போது வரை இவர்கள் படித்து முடித்த சான்றி தழை வழங்காமல் இழுத்தடித்து வந்த னர். இதனால் மாணவர்கள் பெரிதும் சிரமப் பட்டு வந்தனர். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் அம்மாணவர் கள் முறையிட்ட நிலையில், கல்லூரியை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர்  பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் கல்லூரி நிர் வாகம் சான்றிதழ் வழங்க ஒப்புக் கொண்ட நிலையில் போராட்டத்தை கைவிட்டு அனை வரும் கலைந்து சென்ற்னர். முன்னதாக, இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.வெங்க டாசலம் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன் சிலர் சு.சுரேஷ். கட்சி ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.