districts

பாஜக பிரமுகர் என்பதால், மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை

சேலம், மார்ச் 19- பள்ளியின் தாளாளர் பாஜக பிரமுகர் என்ப தால், எனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வில்லை என கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் வேதனையை வெளிப்படுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி விடுதி யில் தங்கி கல்விபயின்று வந்த ஸ்ரீமதி என்ற  மாணவி, கடந்த 2022 ஆம் ஆண்டு சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. இதனையடுத்து, பள்ளியின் தாளாளர், பாஜ கவின் முக்கிய பிரமுகர் மீது ஸ்ரீமதியின் குடும்பத்தி னர் புகார் தெரிவித்தனர். மேலும், தமிழக முதல்வர்  உள்ளிட்ட அதிகாரிகளிடமும் புகார் அளித்திருந் தார். மகளின் உயிரிழப்பிற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறார்.  இந்நிலையில், ஸ்ரீமதியின் குடும்பத்தினர் மோடியை சந்தித்து முறையிட வேண்டும் என தெரி வித்திருந்தார். இதனிடையே, பாஜகவைச் சேர்ந்த  கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனி வாசனிடம், பிரச்சினை குறித்து ஸ்ரீமதியின் தாயார்  தெரிவித்துள்ளார், அப்போது, அவர், பிரதமரை சந் திக்க ஏற்பாடு செய்வதாக கூறப்பட்டதாக தெரி கிறது. இந்நிலையில், சேலத்தில் நடைபெற்ற பாஜக  பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்ற நிலை யில், சேலம் வந்த ஸ்ரீமதியின் தாயார், இன்றா வது சந்திக்க முடியுமா? என முயற்சி செய்தி ருந்தார். ஆனால், அவரை சந்திக்க விடவில்லை. இதனால் ஸ்ரீமதியின் தாயார் விரக்த்தியடைந் தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகை யில், எனது மகளின் மரணம் நாடே தெரிந்த ஒன்று.  ஆனால், இரண்டு ஆண்டு காலம் கடந்தும், பள்ளி யின் தாளாளர் பாஜக நிர்வாகி என்பதால் அவர் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேசம யம் புதுச்சேரில் ஒரு சிறுமி பாலியல் வன்கொலை  செய்யப்பட்ட நிலையில், உடனடியாக பிரச் சனை சம்பந்தமாக உரிய விசாரணை மேற் கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.  ஆனால், இங்கு சரியான நடவடிக்கை எடுக்க வில்லை. இருப்பினும் எனது மகளின் இறப்பிற்கு  நீதி கிடைக்கும் வரை அனைத்து கட்ட முயற்சிக ளையும் எடுக்கப் போவதாக அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.