உடுமலை, மார்ச் 24- உடுமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கழிப் பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து பிரிவு வட்டாட்சியர் அலுவலகங்கள், குற்றவியல் நீதி மன்றம், குடிமைப்பொருள் அலுவலகம், கிளை சிறைச் சாலை, சார்பதிவாளர் அலுவலகம், இசேவை மையம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இத னால், இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், வட்டாட்சியர் அலுவல கத்திற்கு வரும் மக்களுக்கு அலுவலக வளாகத்தில் குடிநீர் தொட்டியில் குடிநீர் வருவதில்லை. குடிநீர் என்று பெயர் எழுதிய தொட்டி மட்டும் உள்ளது. பொது கழிப்பிட கட்டடம் புதர் மண்டி விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக மாறி உள்ள தால் அப்பகுதி திறந்த வெளி கழிப்பிடமாகியுள்ளது. இதனால் அங்கு வரும் பொது மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுகிறது. மேலும், இரண்டு சக்கர வாகனங்கள் முறையாக நிறுத்தாமல் வளாகம் முழுவதும் நிறுத்துவதால் மக்கள் நடத்து செல்லக் கூட முடியவில்லை. இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள் ளது. அலுவலக வளாகத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் இருக்கும் வட்டாட்சியர், எங்களுக்கு எப்படி அரசு திட்டங்களை செயல்படுத்துவார் என்ற கேள்வி எழுவதாக தெரிவித்தனர். மேலும், உடுமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.