தருமபுரி அக்.10- தருமபுரி மாவட்டம் நவலை கிரா மத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் சந்து கடைகளை அகற்றக் கோரி பள்ளி மாணவர்கள் கிராம மக்க ளுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த நவலை கிராமத்தில் பல் வேறு இடங்களில் கள்ள மது பான பாட்டில்கள் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. அனுமதியின்றி சந் துக்கடைகள் செயல்பட்டு வருகின் றன. இங்கு மது விற்பனை அதிகள வில் நடைபெற்று வருவதால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இளைஞர் கள் பள்ளி மாணவர்கள் குடிப்பழக் கத்திற்கு அடிமையாகி வருகின்ற னர். இது சம்பந்தமாக பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால், ஆவேசமடைந்த பள்ளி மாணவ மாணவிகள் கிராம மக்களு டன் இணைந்து மொரப்பூர் கம்பை நல்லூர் செல்லும் சாலையில் நவலை கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட் டனர். மது கடைக்கு எதிர்ப்பு தெரி வித்து பள்ளி மாணவ, மாணவிகள் கையில் பதாகைகளை ஏந்தி முழக்க மிட்டனர். சுமார் இரண்டு மணி நேரத் திற்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் சந்து கடை களை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு அங்கு நேரில் சென்ற வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் பள்ளி மாணவ மாணவிகள் தங்களின் கோரிக்கை முன்வைத்து பேசியபோது நிரந்தர மாக இப்பகுதியில் சந்து கடைகளை அகற்றப்படும் என உறுதியளித் ததை தொடர்ந்து சாலை மறியல் போரட்டத்தை கைவிட்டனர்.