கோவை, ஜன.25- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிலுவை கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என வலியு றுத்தி கனரா வங்கி ஊழியர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டட னர். கோவை கனரா வங்கி மண்டல அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் (பெபி) துணைத்தலைவர் சிவலிங்கம் தலைமை ஏற் றார். இதில் கனரா வங்கியில் காலிப்பணி யிடங்களை நிரப்பிட வேண்டும், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. ஆர்ப்பாட்டத்தில், சிபிஎஸ்யு ஒன்றியக்குழு உறுப்பினர் என்.சுப்பிரமணியம், பெபி கோவை மாவட்டச் செயலாளர் ஆர்.மகேஸ் வரன், பிஓபிஎஸ்யு நிர்வாகி ஜி.பி.சிவானந்தம் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், ஏரளா மான வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். முன்ன தாக கோரிக்கை மனுவினை மண்டல மேலா ளரை சந்தித்து நிர்வாகிகள் அளித்தனர்.