districts

img

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் கொள்ளையர்கள்

கோவை, ஜன.6- சூலூர் அருகே நள்ளிரவில் பயங்கர  ஆயுதங்களுடன் முகமூடி அணிந்து சுற்றி தெரியும் கொள்ளையர்களின் சிசி டிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத் துள்ளது காடாம்பாடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட என்.எஸ்.கே அவென்யூ, நேரு நகர், கிருஷ்ணா கார்டன், பிரின்ஸ் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளியன்று நள்ளிரவில் முகமூடியுடன், கையுறை அணிந்து, கைகளில் அரிவாள் உள்ளிட்ட பயங் கர ஆயுதங்களுடன் மூன்று நபர்கள்  சுற்றித்திரிந்து நோட்டமிட்டு சென்றுள்ள னர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள் ளது. மர்ம நபர்கள் முகத்தை மறைத் தபடி வீதிகளில் சுற்றித்திரியும் காட் சியை, அப்பகுதி வாசிகள் பேஸ் புக், வாட்ஸ்அப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங் களில் பதிவேற்றி யுள்ளனர். இந்த  காட்சிகள் தற் போது வைரலாகி சுற்றுவட்டார கிராம மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  காடம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் ரோந்து  பணியை தீவிரப்படுத்தி அசம்பாவிதங் கள் ஏதும் நிகழ்வதற்கு முன்பே பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  சூலூர் மற்றும் சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிக ளில் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம  நபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்க ளுடன் நள்ளிரவில் சுற்றி வந்து வீடுக ளின் கதவுகளை உடைத்து கொள்ளை யடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.