போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு
நாமக்கல், பிப்.16- திருச்செங்கோட்டில், கல்லூரி மாணவர் களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாதீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி யில், மாவட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற் றது. இந்நிகழ்வில் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) எம்.புகழேந்தி, கோட்ட அலுவலர் எஸ்.கண்ணன், மாவட்ட புகையிலை தடுப் புப்பிரிவு அலுவலர் ஜி.ராஜ்கமல், மது விலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளர் எஸ்.சாந்தகுமார், மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர் ஜி.கற்பகம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில், போதைப் பொருள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்பு கள் குறித்தும், போதைப்பொருளை தவிர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கல்லூரி முதல்வர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி: ரூ.5.25 கோடிக்கு கல்விக்கடன்
தருமபுரி: ரூ.5.25 கோடிக்கு கல்விக்கடன் தருமபுரி, பிப்.16- தருமபுரியில் 48 மாணவர்களுக்கு ரூ.5.25 கோடி மதிப் பில் கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப் பட்டன. தருமபுரி மாவட்டம், ரோட்டரி ஹாலில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்விக்கடன் வழிகாட்டு தல் முகாம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் வியாழ னன்று நடைபெற்றது. இதில் கல்விக்கடன் பெறுவோருக்கு அதற்கான ஆணைகளை வழங்கி ஆட்சியர் கி.சாந்தி பேசுகை யில், மாவட்டத்தில் 2023 மார்ச் 31 வரையில் 11,625 மாணவர் களுக்கு கல்விக்கடனாக ரூ.261.90 கோடி வங்கிகளால் வழங் கப்பட்டுள்ளது. அதேபோல 2023, ஏப்.1 ஆம் தேதி முதல் 2024 ஜன.1 ஆம் தேதி வரை 477 மாணவர்களுக்கு ரூ.24 கோடி கட னாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த கல்விக்கடன் மேளா விழா வில் 155 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். உடனடியாக பரிசீலித்து 93 மாணவா்களுக்கு ரூ.10.83 கோடி கல்விக்கடனு தவி அப்போதே வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வியாழ னன்று 48 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5.25 கோடி மதிப்பில் கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள் ளன, என்றார். இந்நிகழ்வில் இந்தியன் வங்கி மண்டல மேலா ளர் பத்மாவதி ஸ்ரீகாந்த், மாவட்ட முன்னோடி வங்கி மேலா ளர் கே.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை விபத்தில் 2 மாணவர்கள் பலி
சாலை விபத்தில் 2 மாணவர்கள் பலி சேலம், பிப்.16- பனமரத்துப்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந் தனர். சேலம் மாவட்டம், அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த கௌதம் (21) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கேம்மியோ (21) ஆகிய இருவரும் சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரு கின்றனர். இவர்கள் இருவரும் சேலம் மாநகரம், பனமரத்துப் பட்டி பிரிவு சாலை அருகில் உள்ள பொய்மான் கரடு பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தபோது, அருகில் லாரியில் இருந்த காற்றாலை இறக்கையில் கார் மோதி இருவரும் உயிரிழந்த னர். இருவரின் உடல்களும் சேலம் அரசு மோகன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக் கப்பட்டுள்ளது.
தென்னை மரங்களில் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு
திருப்பூர், பிப்.16- திருப்பூர் மாவட்டம், காங்கேயத் தில் வேளாண்மை - உழவர் நலத்துறை யின் சார்பில் தென்னையில் நோய் தாக் குதல், பூச்சி கட்டுப்பாடு, உர மேலாண்மை குறித்த வயல் மட்ட கள ஆய்வை தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி அதிக அளவில் செயப்பட்டு வருகிறது. தென்னை சாகுபடி குறித்து தொடர்ந்து கள ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அந்த வகையில் வெள் ளியன்று வேளாண்மை உழவர் நலத்து றையின் சார்பில் தென்னையில் நோய் தாக்குதல், பூச்சி கட்டுப்பாடு, உர மேலாண்மை குறித்த வயல் மட்ட கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, தென்னை யில் நோய் தாக்குதல், பூச்சி கட்டுப்பாடு, உர மேலாண்மை போன்ற விவரங்கள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைக் கப்பட்டது. மேலும், வெள்ளை ஈ தாக்கு தல் குறித்தும், பூச்சி மருந்துகள் உபயோ கம் தவிர்த்தல், மஞ்சள் நிற பாலீத்தின் தார்களை மரத்தின் தண்டுப்பகுதியில் 6 அடி உயரத்தில் கட்ட வேண்டும் அவை ஏக்கருக்கு 8 என்ற எண்ணிக்கையில் இருக்கவேண்டும் என்பது குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப் பட்டது. மேலும், வேளாண் மற்றும் உழ வர் நலத்துறை சார்ந்த அலுவலர்கள் தென்னை நோய் தாக்குதல், பூச்சி கட் டுப்பாடு, உர மேலாண்மை போன்ற விவ ரங்களை விவசாயிகள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்பு ணர்ச்சியை ஏற்படுத்தி கள ஆய்வு மேற் கொள்ள வேண்டும். தென்னை நோய் தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு முழுமையான விபரங்கள் தெரியப் படுத்தி ஆலோசனைகள் மற்றும் தென்னை நோய் தாக்குதலை கட்டுப்ப டுத்திட விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்க வேண்டும். நீண்ட கால பயிரான தென்னை நோய் பாதிப்பு என்ற சூழ்நிலையை நீங்க வேண்டும் என் கிற வகையில் அனைவரும் ஒருங்கி ணைந்து பணியாற்றிட வேண்டும் என தமிழ் வளரச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித் தார். இந்த ஆய்வுவின் போது, மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப் பன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் தென்னை வளர்ச்சி வாரிய உறுப் பினர் முனைவர்.ராஜமாணிக்கம், திருப் பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத்தலை வர் இல.பத்மநாபன் துணை இயக்கு நர் (தோட்டக்கலைத்துறை) சந்தரகலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, உதவி இயக்குநர்கள் (வேளாண்மை) வசந்தாமணி, வேலுச்சாமி, விவசாயி கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர் கள் பலர் கலந்து கொண்டனர்.
காங்கயம் அருகே விபத்து: ஒருவர் காயம்
காங்கயம் அருகே விபத்து: ஒருவர் காயம் திருப்பூர், பிப்.16- திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன்(55). இவர் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் காங்கயம் நக ரம், கரூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்தார். அப்போது இவருக்கு முன்பாகச் சென்ற ஆட்டோ மீது மோதாமல் இருப்பதற்காக, வண்டியைத் திருப்பி உள் ளார். எதிர்த் திசையில் வந்த விவேகானந்தா அகாடமி பள்ளி வாகனம் மணிவண்ணன் மீது எதிர்பாராத விதமாக மோதி யது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிவண்ணனை அக் கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத் துவமனைக்கு வைத்தனர். பள்ளி வாகனதிற்குள் உட்கார்ந்து இருந்த 15 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் யாருக் கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாக அவர்கள் வேறு வாகனம் மூலம் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டின் கதவை உடைத்து திருடியவர் கைது
வீட்டின் கதவை உடைத்து திருடியவர் கைது திருப்பூர், பிப்.16 - திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாயம்பாளையம் கண்டியன்கோயில் பகுதியில் வடிவேலன் என்பவர் கடந்த 4ஆம் தேதி மாலை வீட்டைப் பூட்டிவிட்டு சென்றிருந்தார். அந்த சமயத்தில் கதவை உடைத்து 10 சவரன் தங்க நகைகள், பணம் மற்றும் டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு வியாழனன்று தர்மபுரி முள்ளுவாடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மணி மாது (55) என்பவரை கைது செய்தனர். ரூ.60 ஆயிரம் பணம், 10 சவரன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தையும் மீட்டனர். சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மணிமாதுவை நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி பல்லடம் கிளைச் சிறையில் அடைத் தனர்.
கனரக வாகனங்களுக்கு அபராதம்
கனரக வாகனங்களுக்கு அபராதம் ஈரோடு, பிப்.16- ஈரோடு,பவானி நகருக்குள் நேரக் கட்டுப்பாட்டை மீறி அனுமதியின்றி வந்த கனரக வாகனங்களுக்கு அபரா தம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக, பவானி நகருக்குள், காலை 11 மணியலிருந்து பிற்பகல் 3 மணி வரை கனரக வாகனங்கள் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணியிலிருந்து இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இரவு 11 மணிக்கு மேல், அதிகாலை 5 மணி வரை அனுமதிக்கப் படுகிறது. இந்நிலையில், பவானி போக்குவரத்து போலீசார், லட்சமி நகர், காலிங்கராயன்பாளையம், பவானி பழைய பாலம் ஆகிய இடங்களில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, நேரக் கட்டுப்பாட்டை மீறி, பவானி நகருக்குள் வந்த, ஐந்துக் கும் மேற்பட்ட கனரக வாகனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர்.
கட்ட கொம்பன் யானை உலா
உதகை, பிப். 16- கூடலூர் அருகேயுள்ள நெலாக் கோட்டை பகுதியில் பட்டப்பகலில் உலா வந்த கட்ட கொம்பன் யானையால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள நெலாக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்கள் மட்டு மல்லாது பகல் நேரங்களிலும் கட்ட கொம் பன் என்ற காட்டு யானை அடிக்கடி உலா வரும் சம்பவங்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பகல் நேரத்தில் உலா வந்த யானை பொதுமக்களை விரட்டி யது, பின்பு இரவில் ஊருக்குள் உலா வந்த யானை அங்குமிங்கும் ஓடியது. இந்த நிலையில் மீண்டும் நெலாக் கோட்டை பகுதியில் கட்டகொம்பன் யானை சாலையில் உலா வந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர், அது வனப்ப குதிக்குள் சென்றது. இந்த யானையின் நட மாட்டத்தால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வனத்துறையினர் யானை யின் நடமாட்டத்தை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியு றுத்தியுள்ளனர்.
தண்ணீரின்றி தவிக்கும் வன விலங்குகள்
தண்ணீரின்றி தவிக்கும் வன விலங்குகள் சேலம், பிப்.16- ஏற்காடு மலைப்பாதையில் உணவு, தண்ணீர் இன்றி இருப்பதால் வன விலங்குகள் தவிப்புக்குள்ளாகியுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடைகாலத்திற்கு முன்பாகவே வறட்சி நிலவுகிறது. இதனால், மலைப்பாதை பகுதிகளில் உள்ள மான், குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. இந் நிலையில், ஏற்காட்டிற்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்று லாப் பயணிகள், கொண்டை ஊசி வளைவில் அமர்ந்தி ருக்கும் குரங்குகளை ரசித்தும் வருகின்றனர். ஒரு சில சுற்று லாப் பயணிகள் குரங்குகளுக்கு உணவளித்தும், தண்ணீர் வழங்கியும் வருகின்றனர். கோடை காலம் துவங்கும் முன்பே ஏற் காட்டில் கடும் வறட்சி நிலவுவதால். மலைப்பாதையில் ஆங் காங்கே தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தும், தண்ணீர் இன்றி குரங்குகள் தவிக்கின்றன. இதனால் வனவிலங்குகள் வாகனங்கள் செல்லும் சாலைக்கு வருவதால் விபத்து ஏற் பட்டு பலியாகும் சம்பவங்கள் நடைபெறுகிறது. உடனடியாக மலைப்பாதையில் அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டி களில் தண்ணீர் முறையாக நிரப்பிட வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய சமுதாயக்கூடம் திறப்பு விழா எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., பங்கேற்பு
புதிய சமுதாயக்கூடம் திறப்பு விழா எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., பங்கேற்பு சேலம், பிப்.16- திருமலைகிரி ஊராட்சியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட் டப்பட்ட புதிய சமுதாயக்கூடத்தை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் திறந்து வைத்தார். சேலம் ஊராட்சி ஒன்றியம், திருமலைகிரி ஊராட்சிக் குட்பட்ட பகுதியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலி ருந்து ரூ.35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இதனை எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் கீதா குணசேக ரன், ஒன்றிய பெருந்தலைவர் மலர்கொடி ராஜா, வட்டமுத் தாம்பட்டி ஊராட்சித் தலைவர் சிவகாமி கோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரயில் நேரத்தில் மாற்றம்
ரயில் நேரத்தில் மாற்றம் சேலம், பிப்.16- கரூர் – திருச்சி மார்க்கத் திற்கு உட்பட்ட லாலா பேட்டை ரயில் நிலையத் தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பராமரிப்பு பணி கள் காரணமாக, திருச்சி – பாலக்காடு இடையேயான ரயில், திருச்சி ரயில் நிலை யத்தில் இருந்து வரும் பிப்.19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வழக்க மாக புறப்படும் நேரத்திற்கு பதிலாக, 1.30 மணி நேரம் தாமதமாக, பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும். இதே போல், பாலக்காடு – திருச்சி இடையேயான ரயில், வரும் பிப்.19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். பகுதி அளவில் ரத்து செய் யப்படும். அதேநேரத்தில், வரும் பிப்.19, 21, 23 மற்றும் 26 ஆம் தேதிகளில், கரூரில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில் பிற்பகல் 2.45 மணிக்கு லாலாப்பேட்டை, பெருகமணி ரயில் நிலையம் வழியாக திருச்சி வரை இயக் கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
மருத்துவ சாதனங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கம்
கோவை, பிப்.16- கோவை ராயல்கேர் மருத்துவமனை சார்பில் “மருத்துவ கருவிகளின் பாது காப்பை மேம்படுத்துவதற்கு முன்னோக்கிச் செல்வது” என்ற தலைப்பில், கருத்தரங்கம் மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது. மருத்துவ துறையில் நோயை கண்டு பிடிக்கவும், நோயை குணப்படுத்தவும், மருத் துவ கருவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மருத்துவ உபகரணங்களை மருத்துவர் கள் மற்றும் துறை சார்ந்த டெக்னீஷயன்கள் பாதுகாப்பாக கையாள்வது குறித்த கருத்த ரங்கம், கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவமனை சார்பாக நடைபெற் றது. இந்தியன் ஃபார்மாகோப்பியா கமிஷன் மற்றும் ஒன்றிய அமைச்சகத்தின் குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், தமி ழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மருத்துவமனை தொடர்பான நிர்வாகிகள், மருத்துவர்கள், மருத்துவ கருவிகள் தயாரிப் பாளர்கள், இறக்குமதியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்தியாவின் மெட்டீரியோ விஜிலென்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவ சாதனங் களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முன் னோக்கிச் செல்வது என்ற தலைப்பில், பயிற்சி பட்டறை நடைபெற்றது. முன்னதாக நடை பெற்ற இதன் துவக்க விழாவில் ராயல்கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ் வரன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், எம்.வி.பி.ஐ.முதன்மை விஞ் ஞானி கலைச்செல்வன், மருத்துவர்கள் பரந்தா மன் சேதுபதி, மணி செந்தில் குமார், காந்தி ராஜ், சதுரஞ்ஜெய் சுக்லா, ஹரிஹரன், அபி ராமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு பவானி நீர்
மே.பாளையம், பிப்.16- மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு பவானி ஆற்றிலிருந்து நீர் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்த முடிவடைந்த நிலையில், பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு பவானி ஆற்றில் இருந்து மிகவும் தூய்மையான தண்ணீர், விளாமரத்தூரிலிருந்து எடுக்கப்பட உள்ளது. இங்கிருந்து தினமும் 12 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படும். இந்த தண்ணீர் சாமன்னா நீரேற்று நிலையம் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டு நகராட்சியின் 33 வார்டுகளுக்கும் விநியோகம் செய்யப்படும். இத்திட்டத்திற்காக, தமிழக அரசு ரூ.22. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டிருந்தது. தற்போது, ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், வியாழக்கிழமை முதல் பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நலத்திட்ட உதவிகள் வழங்கல் உதகை, பிப்.16- உதகையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி யில் 644 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் வழங்கினார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண் பாட்டு மையத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி யில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்தி ரன் கலந்து கொண்டு கடந்த மாதம் நடைபெற்ற மக்களிடம் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து அதில் தேர்வு செய்யப்பட்ட 643 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அமைச்சர் கா. ராமச்சந்தி ரன் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.அருணா, ஊராட்சி ஒன்றியத் தலைவர் மாயன், நகர்மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார் உட்பட ஏராளமனோர் பங்கேற்றனர்.
பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து
பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து சேலம், பிப்.16- உடையாப்பட்டி அருகே உள்ள பிளாஸ்டிக் பொருட் கள் வைத்திருந்த குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், எழும் பிய கரும்புகையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சேலம் மாவட்டம், உடை யாபட்டி, குண்டுகல்லூர் பகு தியிலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திரு விழாவிற்காக பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்பொ ழுது பட்டாசு பறந்து அரு காமையில் இருந்த பிளாஸ் டிக் பொருட்கள் வைத்தி ருந்த குடோனில் விழுந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கடுமையான கரும் புகை கிளம்பியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப் புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்பகுதி முழு வதும் அதிகப்படியான கரும் புகை வெளியேறியதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.