districts

img

புகையிலை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தான்

கோவை, அக்.19- புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் சனியன்று கோவையில் நடைபெற்றது. கோவை மாநகர காவல் துறையின் சார்பில் நடைபெற்ற போட்டி யில், ஆட்சியர் மற்றும் காவல் ஆணை யர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற னர்.  கோவை மாநகரைப் பொருத்த வரை புகையிலை ஒழிப்பு குறித்து பல் வேறு நடவடிக்கைகளை காவல் துறை யினர் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு  பகுதியாக கோவை மாவட்டம், அவி நாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி  பள்ளி மைதானத்தில் ரன் ஃபார் டிரக்  ஃபிரி கோயம்புத்தூர் என்ற தலைப்பில்  விழிப்புணர்வு மாரத்தான் போட்டி சனி யன்று நடைபெற்றது. இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர்  கிராந்தி குமார் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகி யோர் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தனர். இதில், பெண்களுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரமும், ஆண்களுக்கு 5 மற்றும்  7 கிலோமீட்டர் தூரமும் இந்த மாரத் தான் போட்டி நடைபெற்றது.