போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மினி மராத்தான் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்றது. திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் துவக்கி வைத்தார். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முதல் ஆறு இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.