நாமக்கல், செப்.24- தூய்மை குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி பள்ளி பாளையம் நகராட்சி அலுவலகத்தில் அருகே செவ்வான்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூய் மையை நோக்கி மேலும் ஒரு படி தூய்மையை சேவை எனும் தலைப்பில் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை சுற்றுப்புற தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகம் முழு வதும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்று வரு கிறது. இதன் ஒருபகுதியாக, பள்ளிபாளையத்தில், தனியார் கல்லூரி, மாணவ, மாணவியர் நகராட்சி தூய்மைப் பணியா ளர்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தியபடி பள்ளிபாளையம் பேருந்து நிலையம்” ராஜவீதி வழியாக முக் கிய சாலைகளில் பேரணியாக சென்று பள்ளிபாளையம் நக ராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இந்நிகழ்விற்கு நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். நகராட்சி ஆணையர் தாமரை முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் நாட்டுப்புற கலைஞர்கள் பறை இசையுடன், கலை நிகழ்ச்சி மற்றும் நடனம் மூலம் தூய்மை குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர். நகராட்சி உறுப்பினர்கள் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம், நகராட்சி பொறியாளர் ரேணுகா, சந்தோஷ், தூய்மைப் பணியாளர்கள் அரசு அதிகாரி கள் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட னர்.