கோவை, ஜூன் 28- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தருக்கு கௌரவ கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ. கீதாலட்சுமி, பல்கலைக்கழகம், இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் உள்ள தேசிய மாண வர் படைக்கு (என்சிசி) ஆற்றிய தொண்டைப் போற்றும் வகையில், என்சிசி சார்பில் அவ ருக்கு கௌரவ கர்னல் பதவி வழங்கப்படுவ தாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வியா ழனன்று நடைபெற்ற விழாவில், தேசிய மாண வர் படையின் சென்னை துணை இயக்குநர் ஜெனரல் அதுல்குமார் ரஸ்தோகி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வெ.கீதாலட் சுமிக்கு கௌரவ கர்னல் பதவி வழங்கினார். பதவியேற்பு விழாவில், பதிவாளர் ஆர்.தமிழ் வேந்தன், மாணவர் நல மையத்தின் முதல்வர் என்.மரகதம், மண்டல என்சிசி குரூப் கமாண் டர் பி.வி.எஸ்.ராவ், கமாண்டிங் ஆபிசர் ஜே. எம்.ஜோஷி, பல்கலைக்கழக என்சிசி அலு வலர் எஸ்.மனோன்மணி உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். இதைத்தொடர்ந்து வெ.கீதாலட்சுமி செய் தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டில் டி.என். 4 பட்டாலியன் என்ற பெயரில் புதிய என்சிசி பிரிவு தொடங் கப்பட்டது. தொடக்கத்தில் மாணவர்களுக்கு மட்டுமே என்சிசி பிரிவு இருந்த நிலையில், கடந்த 2004 இல் மாணவிகளுக்காகவும் தொடங்கப்பட்டது. தற்போது பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் 352 என்சிசி மாணவர்கள் உள்ளனர். கோவை வளாகத்தில் மட்டும் 104 பேர் உள்ளனர். மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல் படும் என்சிசியின் சாா்பில் கௌரவ கர்னல் பதவி வழங்கியிருப்பது பெருமையளிப்ப தாக உள்ளது, என்றார்.