districts

img

தூய்மை பணியாளர்களின் மாத ஊதியத்தை உறுதிபடுத்துக அவிநாசி ஒன்றிய சிபிஎம் கவுன்சிலர் வலியுறுத்தல்

அவிநாசி, மே 6- தூய்மை பணியாளர்களுக்கு முறையாக மாத, மாதம் ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்திட வேண்டும் என அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றிய கவுன்சிலர் முத்துச் சாமி வலியுறுத்தினார். அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜெகதீசன் தலை மையிலும், வட்டார வளர்ச்சி அலு வலர் மனோகரன் மற்றும் விஜய குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த கனியாம்பூண்டி புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி பேசுகை யில், அரசு பள்ளிகளில் பணியாற் றும் தூய்மை பணியாளர்களுக்கு முறையாக மாத ஊதியம் கிடைப் பதில்லை. இதுதொடர்பாக கூட் டத்தில் வலியுறுத்தினால் மட்டுமே நான்கு மாதத்திற்கு ஒரு முறை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆகவே, மாதந்தோறும் முறை யான ஊதியம் வழங்க வேண்டும்.   ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சில கடி தங்கள் ஆங்கிலத்தில் உள்ளது. தாய்மொழி தமிழை கடிதத்தில் அச்சிட்டு தரவேண்டும். கௌசிகா நதி செல்லும் பாதைகளில் இறைச்சிக் கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர். இதனை உடனடியாக தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.  தொழிற்சாலைகள் மற்றும் தனி யார் பள்ளிகள் முறையாக  தொழில்வரி செலுத்தியுள்ளார் களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்  இவ்வாறு அவர் பேசி னார்.  இதையடுத்து திராவிட முன் னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சேது மாதவன் பேசுகையில், இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணியாற் றும் ஊழியர்களுக்கு மாத ஊதி யம் முறையாக வழங்குவ தில்லை. மேலும், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட நியாய விலை கடைகளில் பருப்புகள் முறையாக கிடைப்பதில்லை என்று குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜெகதீசன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவ லர் மனோகரன் ஆகியோர் கோரிக் கைகள் மீது விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரி வித்தனர்.