கோவை, மார்ச் 15- குன்னூர் மலைப்பாதையின் முதல் கொண்டை ஊசி வளைவில் விபத்துகளை தடுக்க பொருத்தப் பட்டிருந்த தானியங்கி ஒலிபெருக்கி கருவி ஓராண்டிற்குள் பழுதாகியுள்ள தால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற் பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்திலிருந்து உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத் திற்கு செல்ல குன்னூர் மற்றும் கோத் தகிரி ஆகிய இரு வனச்சாலைகள் உள்ளன. ஆண்டு முழுவதும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இந்த சாலையில் எப்போ தும் வாகனங்கள் அணிவகுத்து சென்று வருகின்றன. குறிப்பாக மேட்டுப்பாளை யம் - குன்னூர் சாலையின் அதிகள வில் வாகன பயன்பாடு உள்ளது. அதே சமயத்தில் இந்த சாலை அடர் வனத்தில் இருப்பதால் யானை, மான், குரங்கு, சிறுத்தை உள்ளிட்ட வன உயிரினங்கள் அவ்வப்போது சாலையை கடக்கும் நிலையில், அதி வேகமாக வரும் வாகனங்களால் வன உயிரினங்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வு ஏற்படுகிறது. அத்துடன் இந்த சாலையில் ஏழு கொண்டை ஊசி வளைவுகள் உள்ள தால், இந்த வளைவுகளில் அடிக்கடி வாகனங்களும் ஒன்றொடு ஒன்று மோதி விபத்து ஏற்படுவதுடன் பள் ளத்தாக்கில் கவிழும் நிலையும் இருந்து வந்தது. இதனிடையே கொண்டை ஊசி வளைவில் வரும் வாகனங்கள் அந்த வளைவுக்கு முன்னரே வாகனங்கள் வருவதை அறிந்து கொள்ளவும் வன உயிரினங்கள் அந்த வழியாக வரு வதை தவிர்க்க சாலை ஓரத்தில் தானி யங்கி ஒலிபெருக்கி கருவி தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக் கப்பட்டது.
இதன் மூலம் வாகன விபத் துகள் தவிர்க்கப்படும் எனக்கூறி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப் பாதையில் முதல் கொண்டை ஊசி வளைவில் இந்த திட்டம் துவக்கப் பட்டது. திட்டம் துவங்கி ஓராண்டு கூட முழுமை பெறாத நிலையில், தற் போது அந்த பயன்பாடு முற்றிலும் பழுதுபட்டு எந்த பயனுமின்றி முடங்கியுள்ளது. கொண்டை ஊசி வளைவிற்கு முன்பே சோலார் மூலம் இயங்கும் சென்சார் பொறுத்தபட்டு, அவ்வழி யாக ஒரு வாகனம் கொண்டை ஊசி வளைவினை கடக்கும் போது, சென் சார் மூலம் தானாகவே ஒலி பெருக்கி இயங்கி வாகனம் வருவதை அறி விக்கும். அதுமட்டுமின்றி அங்குள்ள சிக்னல்கள் மற்றும் அறிவிப்பு பலகை ஆகியவை ஒரே சமயத்தில் இயங் கும். இது மேலே இருந்து வரும் வாகனங்கள் மற்றும் கீழே இறங்கும் வாகனங்கள் எளிதில் அறிந்து கொள் ளும் வகையில் ஏற்படுத்தபட்டிருந் தது. ஆனால், அதனை முறையாக நெடுஞ்சாலைத்துறை பராமரிக்க தவறியதால், இப்போது பயன்பாட் டில் இல்லாமல் முடங்கியுள்ளது. இனிவரும் காலம் கோடை சீசன் என்பதால் உள்நாடு மட்டுமின்றி வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் என ஆயி ரக்கணக்கானோர் உதகைக்கு வரு வார்கள். எனவே, விபத்துகளை தடுக்க இந்த தானியங்கி ஒலிபெருக்கி அலா ரம் திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.