districts

அடிப்படை வசதிகளற்ற ஆத்தூர் அரசு மருத்துவமனை

சேலம், ஜன.1- ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனை யில் அடிப்படை வசதிகளற்று இருப்பதா லும், குரங்குகள் நடமாட்டம் ஆகியவற்றால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் மைய பகுதி யில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மகப்பேறு மருத்துவ சிகிச்சை, விஷக்கடிக்களுக்கான சிகிச்சை, காய்ச்சல் பிரிவு, குழந்தைகள் பிரிவு, சித்தா ஹோமியோபதி உள்ளிட்ட பல  பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. ஆத்தூர், தலைவாசல், காட்டுக்கோட்டை, மஞ்சினி, கொத்தாம்பாடி, தாண்டவராயபுரம், மல்லி கரை, தம்மம்பட்டி, கெங்கவள்ளி உள்ளிட்ட  பல்வேறு பகுதியைச் சேர்ந்த கிராமப்புற மக் கள் இம்மருத்துவமனைக்கு வந்து செல் கின்றனர். உள் மற்றும் புறநோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும்  ஆண்கள் பெண்கள் எனும் தனித்தனி வார்டு கள், 3 தளம் கொண்ட அடுக்குமாடி கட்ட டத்தில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயா ளிகள் அறையில் உள்ள டைல்ஸ் தரை சேத மடைந்துள்ளன. இந்த டைல்ஸ் மீது நோயாளி கள் மற்றும் மருத்துவர்கள் நடந்து செல்லும்  போது, காயம் ஏற்படுகிறது. இதனால் சிகிச்சை பெற்று வரும் நோயா ளிகளின் உதவியாளர்கள் மருந்து, மாத்திரை, உபகரணங்கள் வாங்க மருத்துவமனை வளா கத்துக்குள் பயந்து பயந்து செல்கின்றனர். மேலும், இங்குள்ள மின்விளக்குகள் சரி வர எரிவதில்லை. நோயாளிகள் தங்கியிருக்கும் அறையில் மின்விசிறிகள் இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. மருத்துவமனை வளாகத்தில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், மருத் துவமனையில் உள்ள நோயாளிகளின் உணவுகளை குரங்குகள் பறித்துச் செல்லுவ தோடு, அச்சுறுத்தி வரும் நிலை ஏற்பட்டுள் ளது. மருத்துவமனையில் போதுமான கட்ட மைப்பு வசதிகள் இல்லாததால் நோயாளி கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு  உள்ளாகி வருகின்றனர். புதிதாக கட்டப்பட்ட கட்டடம் குறுகிய காலத்திலேயே இப்படி ஒரு அவல நிலைக்கு சென்றுள்ளதாக பொது மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, ஆத்தூர் அரசு மருத்துவமனை கட்டடங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். அடிப்படை வசதிகளை தரமாக இருப்பதை உறுதிபடுத்த வேண்டும். சுகா தாரத்துறை அமைச்சர் மாநில முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் சோதனை  செய்து வருகின்ற நிலையில் ஆத்தூர் அரசு  மருத்துவமனையை ஆய்வு செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.