districts

img

தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதலும் - பாதுகாப்பு வழிமுறைகளும்

தமிழகத்தில் மட்டும் சுமார் 8 லட்சத்து 57 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன் பெறுகின்றனர். தமிழகத்தின் தென்னை நகரமாக விளங்கும் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சுமார் ஒரு  லட்சத்து  85  ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் தென்னை  பயிரிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட பகுதிகளில்  தென்னை பயிர் கள் அதிகம் பயிரிடப்பட்டுள்ள பகுதிகளா கும். இதன் மூலமாக நாளொன்றிற்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது.   மேலும், தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களுக்கும், அண்டை  மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கும் இள நீர், தேங்காய் எண்ணெய், தேங்காய் சர்க்கரை, நீராபானம், கொப்பரை உள் ளிட்ட உப பொருட்கள் ஏற்றுமதி செய்யப் படுகிறது.

காயர் பித்து, மெத்தைகள் உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.  அதனை சீர்குலைக்கும் வகையில் தென்னையில் நோய் தாக்குதலும் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.இதிலிருந்து தென்னையை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் பாது காப்பு வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைத்துறை பொள்ளாச்சி தோட்டக்கலைத் துறையினர் கூறுகை யில்,  ரூகோஸ் வெள்ளை ஈக்கள் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் வயதில் முதிர்ந்த பெண் ஈக்கள் ஆகும். இது மஞ்சள் நிறத்தில் நீள்வட்ட முட்டை களை சுழல் வடிவ அமைப்புகளில், தென்னை ஓலைகளின் அடிப்பாக்கத்திள் இடுகின்றன. இம்முட்டைகள் மெழுகு  பூச்சுடன் காணப்படும். முட்டைகளிலி ருந்து வெளிவரும் நகரும் தன்மை கொண்ட இளங்குஞ்சுகள் இலைகளில் அடிப்பரப்பில் இருந்துக்கொண்டு இலை களின் சாற்றினை உறிஞ்சி வளர்கின்றன. இதன்பின்னர் நான்கு பருவங்களை கடந்து கூட்டுப்புழுப் பருவத்தை அடைந்து பின்னர் முதிர்ந்த ஈக்களாக வெளிவரு கின்றன. சுமார் 20-லிருந்து 30 நாட்களில் முழுமையாக வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறியதும் கூட்டம், கூட்டமாக தென்னை  ஓலைகளின் அடிப்பகுதியில் காணப்படு கிறது. இவை காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள  தென்னைகளை பாதிக்கிறது. இதனால் தென்னை பயிர்கள் முற்றிலுமாக சேத மடைந்து விடுகிறது. தாக்குதல் அறிகுறிகள்  ரூகோஸ் வெள்ளை ஈக்களின் தாக்கு தல் அறிகுறிகளில் சிலவற்றைக் காண் போம். இவை இலைகளின் அடிப்பாகத் தில் சுருள் வடிவத்தில் முட்டைகள் காணப் படுகின்றன. இதன் குஞ்சுகளும், முதிர்ந்த வெள்ளை ஈக்களும் தென்னை ஓலை களின் அடியில் இருந்து சாற்றை உறிஞ்சு கின்றது. இவை வெளியேற்றும் தேன் திரவக்கழிவுகள் கீழ்மட்ட அடுக்கில் உள்ள 10 முதல் 12 ஓலைகளின் மேற்பரப்பில் பரவு கின்றன.இவற்றின் மேல் ‘கேப்னோடியம்’ என்ற கரும்பூசணம் படர்கிறது. இப்பூச்சி கள் ஏற்படுத்தும் பாதிப்பால் மகசூல் இழப்பு பெரிதளவு ஏற்படுவதில்லை.குறிப்பாக வெள்ளை ஈக்கள் அனைத்து தென்னை ரகங்களில் காணப்பட்டாலும்,  சௌகாட் ஆரஞ்சு குட்டை மற்றும் மலேசியன் மஞ் சள் குட்டை, கென்தாளி குட்டை,  மலேசி யன் பச்சை குட்டை,  இரகங்களிலும் குட்டை ‘யீ’ நெட்டை வீரிய ஒட்டு ரகங்க ளில் அதிகளவில் தாக்குதல்களை தொடுக் கின்றது. மாற்றுப் பயிர்கள்  ரூகோஸ் எனும் வெள்ளை ஈக்கள்  வாழை மற்றும்  வெண்டை, சப்போட்டா,  எழுமிச்சை, செம்பருத்தி உள்ளிட்ட பயிர் களில் தென்னையைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது. எனவே, தென்னை பயிரிடும் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் மாற்றுப் பயிர் களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண் டும் என தமிழ்நாடு வேளாண்மைத் துறை  தமிழக விவசாயிகளுக்கு அறிவுறுத்து கிறது. வளர் சூழ் பருவங்கள்   ரூகோஸ் வெள்ளை ஈக்களின் வளர் சூழ் பருவமென்பது யாதெனில் ஒவ் வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பருவமழை குறை வினால் ஏற்படும் வறட்சி மற்றும் அதிகளவு வெப்பம் மற்றும் குறைந்த காற்றின் ஈரப் பதம் உள்ளிட்டவை வெள்ளை ஈக்களின் வளர்சூழ் பருவத்திற்கு காரணமாக இருக் கலாம் என்று கருதப்படுகிறது. மேலாண்மையும் - கிரைசோபிட் இரை விழுங்கிகளும்  தென்னை பயிரை தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈக்களிடமிருந்து பாதுகாக் கும் வழிமுறைகளும் அதன் மேலாண்மை களும் குறித்து  விரிவாகக் காண்போம்.  மஞ்சள் நிறத்தில் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையு டையதால் மஞ்சள் நிற பாலித்தீன் தாள் களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறி கள் (நீளம் 3 அடி, அகலம் 1 அடி) ஏக்க ருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 6 அடி  உயரத்தில் ஆங்காங்கே கட்டி தொங்க விடப்பட்டு பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும்.

மேலும் பூச்சி களின் வளர்ச்சியை தடுக்க,  இலை மட்டை களில் உள்ள ஓலைகளின் அடிப்புறத்தில் நன்கு படுமாறு தண்ணீர் தெளிக்க வேண் டும். கிரைசோபைட் இரை விழுங்கிகள் இந்த பூச்சிகளின் வளர்ச்சி நிலைகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் ஹெக்டருக்கு 1000 என்ற எண்ணிக்கையில் விடவும், இதனைத் தொடர்ந்து இவ்வகை வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும் போது ‘காக்ஸிணெல் லிட்’ பொறி வண்டுகள் ‘என்கார்ஸியா ‘ஒட் டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தென்னை தோப்புகளிலியே இயற்கை யாக உருவாக ஆரம்பிக்கின்றன. இதன் பின்னர் இவ்வகை இயற்கை எதிரிகளைக் கொண்டு தாக்குதலுக்கு உள்ளான ஓலை களை சிறிய அளவில் வெட்டி எடுத்து பாதிப்பு அதிகமாக உள்ள தென்னை மரங் களின் மீது வைக்க வேண்டும்.  ஒரு லிட்டர் நீருக்கு வேப்பெண்ணெய் 30 மில்லி அளவு (அல்லது)  அசாடிராக்டின் 1 மூடி (1 மில்லி) மருந்தை 1 மில்லி ஒட்டு திரவத்து டன் தென்னை ஓலையின் அடிப்புறம் தெளிக்கவும். இது வெள்ளை ஈக்கள் அழிப் பதற்கும், தென்னை பயிர்களை காப்பதற் கும் சிறந்த வழியாகும்.  தென்னை விவசாயிகளின் கவனத்திற்கு  தென்னை விவசாயிகள் அதிகளவு பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கும் போது நன்மை செய்யும் இயற்கை எதிரி களும் அழிந்துவிடக்கூடும். எனவே பூச்சிக் கொல்லிகளை தவிர்த்து  பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது ஆகச் சிறந்ததாகும்.