districts

img

விடிய விடிய மது விற்பனை: மதுக்கூடத்திற்கு பூட்டு

சேலம், ஏப்.23- சேலத்தில் விடிய விடிய மது விற் பனையில் ஈடுபட்டிருந்த மதுக்கூடத் திற்கு வாலிபர் சங்கத்தினர் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் சாந்தி தியேட்டர் அருகே டாஸ்மாக் மது பான கடை பார் வசதியுடன் உள்ளது. மது பான கடை பூட்டிய பிறகு அருகாமை யில் உள்ள பாரிலிருந்து சட்டவிரோத மாக மதுபானம் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. இந்த மதுபாரில் விடிய விடிய மது விற்பனை படுஜோராக  நடை பெற்று வந்துள்ளது. இரவு முழுவதும் மது விற்பனை செய்யப்பட்ட பிறகு,  ஞாயிறன்று காலையிலும் மது பாட்டில் கள் விற்பனை செய்யப்படுவதை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்ட விரோதமாக மது விற்பனை செய் யப்பட்டு வந்த பாரை குடிமகன்களுடன் பூட்டு போட்டு, காவல் துறையை கண் டித்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது, மதுபார் அருகாமையி லேயே காவல் நிலையம் இருந்தும், சட்டவிரோத மது விற்பனை நடைபெறு வதை காவல் துறையினரும் தடுக்க வில்லை. இப்போராட்டம் குறித்து சம் பவ இடத்திற்கு வந்த வந்த காவல் துறை யினர், போராட்டக்காரர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத் திற்கு பிறகு டாஸ்மாக் பாரை திறந்த வுடன் உள்ளே இருந்த குடிமகன்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர். இப்போராட்டத்தில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வி.பெரியசாமி, பிர பாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.