கோவை, செப்.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆறுக் குட்டி(88),வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறை வால் திங்க ளன்று இரவு காலமானார். கோவை மாவட்டம், காளப்பட்டி பகு தியில் 1952 ஆம் ஆண்டு தொழிற்சங் கங்களை ஒருங்கிணைத்து துவங்கப் பட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தனது பயணத்தை துவக்கியவர் தோழர் ஆறுக்குட்டி. சிஐடியு பஞ்சாலை தொழிற்சங்கங்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட் டங்களில் தன்னை முழுமையாக அர்ப்ப ணித்துக் கொண்டார். இவரது இணை யர் பொன்னம்மாள் அண்மையில் கால மானார். இவரும் மாதர் சங்கத்தின் முக் கிய பொறுப்புகளை வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தோழர் ஆறுக்குட்டியின் மகள் கனகாம்புஜம், மகன்கள் ஆ.பாலதண்டாயுதம் (எ) பாலாஜி, ஆ.மேகநாதன், ஆ.விஜயகுமார் என குடும்பத்தினர் அனைவரும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அரங்கங்களின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகின்றனர். பீளமேடு புதூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த தோழர் ஆறுக்குட்டி, தனது இறுதிக்காலம் வரையில் கட்சி யின் அனைத்து இயக்கங்களிலும் பங் கேற்று, இளைஞர்களுக்கு வழிகாட்டி யாக திகழ்ந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப் பட்ட நிலையில் திங்களன்று இரவு அவரது இல்லத்தில் காலமானார். செவ்வாயன்று பீளமேடு பி.எஸ்.ஜி மருத்துவமனை அருகே உள்ள மயா னத்தில் அன்னாரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் சி.பத்மநாபன் மற் றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு இடதுசாரி அமைப்புகளின் தோழர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.