கோபி, ஜூன் 3- கோபியில் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபியில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் கலைஞரின் பிறந்த நாள் விழா ஒன்றியச் செயலாளர் சிறுவலூர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறு வலூர், அயலூர், மொடச்சூர், நாதிபாளையம், நஞ்சைகோபி, குருமந்தூர்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் சிறுவலூர் முருகன் கலந்து கொண்டு கலைஞர் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் குருமந்தூர்மேடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னாதானம் வழங் கப்பட்டது. இந்நிகழ்வில், திமுக ஒன்றிய துணைச் செயலாளர்கள், அமராவதிநாராயணன், கோதண்டபாணி, தகவல் தொழில் நுட்ப அமைப்பாளர் ரவிகுமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.