திருப்பூர், பிப்.20- பல்லடத்தில் தமாகா வேட்பா ளரின் 2 இருசக்கர வாகனங்கள் நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டது. போலீ சார் உடனடியாக விசாரணை நடத்தி வாகனங்களை தீ வைத்து எரித்த குற்றவாளியை கைது செய்தனர். பல்லடம் நகராட்சிக்கு உட் பட்ட அதிமுக கூட்டணி 15 ஆவது வார்டு வேட்பாளராக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பல்லடம் நகர செயலாளர் பிரண்ட்ஸ் முத்துக்கு மார் போட்டியிட்டார். சனியன்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இரவு பல்லடம் கொசவம்பாளை யம் சாலையில் தேர்தல் பணி மனை அருகே சாலை ஓரமாக தனது ஹீரோ ஹோண்டா சைன், ஹீரோ கிளாமர் ஆகிய இரண்டு இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு தனது ஆதரவாளர் களுடன் உணவு அருந்துவதற் காக சென்றுள்ளார். இந்நிலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டி ருந்த இந்த இரு வாகனங்களும் திடீரென நள்ளிரவில் தீ பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்து விட்டது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில் நடைபெற்றதால் இச் சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பிரண்ட்ஸ் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பெயரில் பல்லடம் டிஎஸ்பி வெற் றிச்செல்வன் தலைமையில் பல்ல டம் காவல் ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், குற்றப்பிரிவு ஆய்வா ளர் மதிவாணன் சம்பவ இடம் விரைந்து சென்று இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற் கொண்டனர். மேலும் வழித்தடத்தில் கடைக ளில் பொருத்தப்பட்டிருந்த சிசி டிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதனிடையே வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதே பகு தியை சேர்ந்த விக்னேஸ்வரன் (27), என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்த னர். இதில் அந்த இளைஞர் தான் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தார் என்பது தெரியவந்தது. அப்பகுதியில் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் நள் ளிரவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் விக் னேஸ்வரன் மது போதையில் சாலையோரம் நின்றிருந்த இரண்டு இருசக்கர வாகனங்க ளையும் கீழே தள்ளி விட்டு, அதில் வழிந்தோடிய பெட்ரோலை பிடித்து இரண்டு வாகனங்கள் மீதும் ஊற்றி பின்னர் தீ வைத்து விட்டு சாவகாசமாக அவர் வீட் டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் வீட்டில் இருந்த படியே வெளியே நோட்டமிட்டபோது இரண்டு வாகனங்களும் தீப்பற்றி மளமளவென எரிந்து கொண்டி ருப்பதை கண்டு, அவரது செல் போனில் இருந்து திருப்பூர் மாவட் டம் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் பல்ல டம் போலீசாருக்கு சந்தேகம் இல் லாத வகையில் கவனத்தை திசை திருப்பும்படி நடந்து கொண்ட தோடு, அப்பாவி போல் காலை யில் அதே பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தார். தீ வைத்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இருசக்கர வாக னங்கள் நிறுத்தி அடிக்கடி இடை யூறு செய்து வந்ததால் திட்டமிட்டு தீ வைத்ததாக வாலிபர் விக்னேஸ் வரன் போலீசில் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. வாலிபர் விக்னேஸ்வரனை போலீ சார் கைது செய்துள்ளனர்.