districts

அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி

நாமக்கல், ஜன.4- நாமக்கல்லில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா மிதி வண்டி போட்டிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஆர்.என்.ராஜேஸ்குமார் தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் தில் சனியன்று, பேரறிஞர் அண்ணா-வின் பிறந்த நாளை  முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு  ஆணையம் சார்பில், மிதிவண்டி போட்டி நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ச.உமா  தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் து.கலாநிதி  முன்னிலை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர்.என்.ராஜேஸ்குமார் போட்டியை கொடியசைத்து  தொடங்கி வைத்தார். 13 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர் களுக்கு 15 கி.மீ தூரமும், மாணவியர்களுக்கு 10 கி.மீ தூர மும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு  20 கி.மீ தூரமும், மாணவியர்களுக்கு 15 கி.மீ தூரமும்  என மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் தனித்தனி யாக நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 350க்கும்  மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை  மேயர் செ.பூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ். கோகிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.