districts

img

கட்டடக்கலை கண்காட்சி – திரளானோர் பங்கேற்பு

கோவை, ஜன.7- பொள்ளாச்சியில் நடைபெற்ற கட்டடக் கலை கண்காட்சியில் திரளானோர் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி - பல் லடம் சாலையில் உள்ள கே.கே.ஜி மஹா லில் கட்டிடக்கலை கண்காட்சி நடைபெற் றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கண் காட்சியில், புதிதாக வீடு கட்ட விரும்புவோர், வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கான பிரத்யேக கட்டுமானத் துறை, வீட்டுமனை விற்பனை செய்வோர், உள் அலங்கார நிபு ணர்கள், கட்டுமானப் பொருட்கள் விற்பனை  செய்வோர், வீட்டுக் கடன் வழங்கும் வங்கி கள், நிதி நிறுவனங்கள் போன்ற கட்டடக் கலை தொடர்பான ஐம்பதுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாமும் கண் காட்சியில் இடம்பெற்றிருந்தது.  முன்னதாக கண்காட்சியை, ஒமேகா  ஈவெண்ட்ஸ் உரிமையாளர் வெங்கடேஸ் குமார் ஒருங்கிணைத்தார். பொள்ளாச்சி நக ராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ் ணன் துவக்கி வைத்தார். அரிமா சங்க கவர் னர் நித்தியானந்தம், ராஜசேகர், ப்ரைட் அரிமா சங்கப் பொருளாளர் ஜெகதீஸ் உள் ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்துகொண் டனர்.