திருப்பூர், மே 25- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி யில் தொல்லியல் கருத் தரங்கம் மற்றும் தொல் பொருட்கள் கண்காட்சி புதன்கிழமை நடை பெற்றது. இந்த கல்லூரியின் வர லாற்றுத் துறை சார்பில் திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் வ.கிருஷ்ணன் தலைமை ஏற்றார். அவர் தொல் பொருள் கண்காட்சியைத் தொடங்கி வைத்து தலைமை உரை ஆற்றினார். வரலாற்றுத் துறைத் தலைவர் பேரா சிரியர் ர.சங்கமேஸ்வரன் வரவேற்றார். இந்தக் கருத்தரங்கில் திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குநர் பொறியாளர் சு.ரவிக்குமார் பெருங் கற்காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி யும், அம்மக்களால் எடுக் கப்பட்ட நீத்தோர் நினை வுச் சின்னங்களான கல் திட்டை, கல் பதுக்கைகள், கல் வட்டம், கற் குவியல், முதுமக்கள் தாழி மற்றும் நெடுங்கல் பற்றியும் விரி வாக எடுத்துரைத்தார். மேலும். இக்கண்காட்சி யில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பண்டைய மக்கள் பயன்படுத்திய தொல்லியல் பொருட்க ளைக் காட்சிப்படுத்தி இருந்தனர். இப்பொருட்களைப் பற்றி ஆய்வு மையத்தைச் சேர்ந்த க.பொன்னுசாமி மாணவர்களுக்குக் விளக்கி கூறினார். இதில் பேராசிரியர்கள், மாணவ மாணவியர் திரளானோர் கலந்து கொண் டனர் இறுதியில் மாணவர் மன்றச் செயலர் அகில் பிரசாத் நன்றி கூறினார்.