districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சீரான குடிநீர் விநியோகத்திற்காக பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

சீரான குடிநீர் விநியோகத்திற்காக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் சேலம், மார்ச் 5- சேலம் மாவட்டத்தில் கோடைக்காலத்தில் சீரான  குடிநீர் விநியோகம் செய்வதற்கு ஏதுவாக மண்டல அளவிலான பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய் யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது, எதிர்வரும் கோடைக்காலத் தில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதை உறுதி செய்திடும் வகையிலும், குடிநீர் தேவைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையினை  1077 மற்றும் 0427-2450498 ஆகிய எண்களில் தொடர்பு  கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். மேலும், கோடைக்காலத்தில் குடிநீர் தேவைகள் அதிகம் உள்ள தாகக் கருதப்படும் 8 வட்டாரங்களுக்கு மண்டல அளவி லான பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், கொளத்தூர் வட்டாரத்திற்குட்பட்டவர்கள் 73737 04567 என்ற எண்ணிலும், காடையாம்பட்டி வட் டாரத்திற்குட்பட்டவர்கள் 74026 06747 என்ற எண்ணிலும், ஓமலூர் வட்டாரத்திற்குட்பட்டவர்கள் 74026 06746 என்ற  எண்ணிலும், அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்திற் குட்பட்டவர்கள் 74026 06751 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், தாரமங்கலம் வட்டாரத்திற்குட் பட்டவர்கள் 74026 06753 என்ற எண்ணிலும், பனமரத்துப் பட்டி வட்டாரத்திற்குட்பட்டவர்கள் 74026 06740 என்ற  எண்ணிலும், கெங்கவல்லி வட்டாரத்திற்குட்பட்டவர் கள் 74026 06742 என்ற எண்ணிலும், மேச்சேரி வட்டாரத்திற் குட்பட்டவர்கள் 74026 06739 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரங்களை வெட்ட பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

மரங்களை வெட்ட பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு தருமபுரி, மார்ச் 5- ராஜாஜி நீச்சல் குளத்தின் உள்புறத்தில் உள்ள சுமார் 35 வருடம் வயதுள்ள வேப்பம், புங்கம் உள்ளிட்ட மரங்களை வெட்ட பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய  வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தருமபுரி ஆட்சியரிடம் சமூக ஆர்வ லர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ராஜாஜி நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சிக்காக தினமும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். நீச்சல்  குளத்தைச்சுற்றி எந்தவொரு இடையூறும் இல்லாமல், பல வகையான பழமையான மரங்கள் உள்ளன. சுற்றுச் சுழலை பாதுகாக்க மிகப்பெரிய அங்கமாக அந்த  மரங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த பிப்.27 ஆம் தேதியன்று சுமார் 40 வயதுடைய ஒரு வேப்ப மரத் தையும் மற்றும் நாவல் மரத்தையும் எந்த ஒரு முகாந்திர மும் இல்லாமல் வெட்டி அகற்றி விட்டனர். இதை  பார்த்த சமூக செயற்பாட்டார்கள் மேற்படி நிர்வாகத்தி டம் விசாரித்த போது, வளர்ச்சிப் பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டதாக தெரிவித்தனர். எனவே, மீதமுள்ள 40 வயதுள்ள மரங்களை வெட்ட பிறப்பிக்கப்பட்டுள்ள அரசு ஆணையை ரத்து செய்து, எவ்வித பாதிப்பும் இல்லாமல் வளர்ச்சிப் பணிகளை செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு

அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு தருமபுரி, மார்ச் 5- தருமபுரி அரசினர் பொறியியல் கல்லூரியில், 2021  மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பை நிறைவு செய்த 345 மாணவ, மாணவியருக்கு பட்டங் கள் வழங்கப்பட்டன. தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா விற்கு, கல்லூரி முதல்வர் வே.சுமதி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சேலம் ஏரோஸ்பேஸ் இன்ஜி னியர்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் நிறுவனர், மேலாண்  இயக்குநர் இரா.சுந்தரம் கலந்து கொண்டு, பட்டங் களை வழங்கி பேசினார். இதில் அமைப்பியல் துறையில் இருந்து 67 மாணவர்கள், இயந்திரவியல் துறையில் 60,  மின்னியல் துறையில் 71, மின்னணுவியல் துறையில் 56, கணினி அறிவியல் துறையில் 91 என மொத்தம் 345 மாண வர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் கல்லூரி துணை முதல்வரும், மின்னியல் துறைத்தலைவருமான பேராசிரியர் எஸ்.செந்தில்குமார், அமைப்பியல் துறைத் தலைவர் வீ.ராஜ்குமார், கணினி அறிவியல் துறைத் தலைவர் ஜா.செ. மிராக்ளின் ஜாய்ஸ் பமிலா, மின்னணு வியல் துறைத்தலைவர் ந.அமினா பிபி, இயந்திரவியல் துறைத்தலைவர் பா.ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு மாலை, கீரீடம் அணிவித்து உற்சாக வரவேற்பு

சேலம், மார்ச் 5- வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர்ந்த பள்ளி குழந்தைகளுக்கு மாலை, கிரீடம் அணிவித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர்  சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்திற்குட்பட்ட ஏத்தாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், புதிய மாண வர் சேர்க்கை விழா நடைபெற்றது. மாவட்ட  தொடக்கக்கல்வி அலுவலர் சந்தோஷ் முன் னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏத் தாப்பூர், வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம், படையாச்சியூர், கல்லோரிப் பட்டி, உத்தரகாண்டம்பாளையம், அபின வம் உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு மாலை மற் றும் கிரீடம் அணிவித்து, எழுது பொருட்கள் அளித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 53 வகை யான நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதனை பெற்றோர்கள் பயன்படுத்தி, தங்க ளது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து  பயன்பெற வேண்டும் என மாவட்ட தொடக்க  கல்வி அலுவலர் சந்தோஷ் தெரிவித்தார். இந் நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக் குமார், வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி  மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

யானையை தேடும் பணியில் வனத்துறையினர்

தருமபுரி, மார்ச் 5- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனப் பகுதியில் வெளியேறிய ஒற்றை ஆண் யானை,  காரியமங்கலம் வழியாக அண்ணாமலை அள்ளி, சவுளுக்கோட்டை பகுதியில் இருந்த கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து ஜெயஸ்ரீ என்ற பெண்ணை தாக்கியது. இந்நிலையில், அந்த யானை மான்காரன்கோட்டை பகு தியை வந்தடைந்தது அங்குள்ள கரும்பு தோட் டத்திலிருந்த சோளத்தட்டு உள்ளிட்ட பயிர் களை சேதப்படுத்தியபோது, வனத்துறையி னர் பட்டாசு வெடித்து யானையை விரட்டி னர். இதைத்தொடர்ந்து செட்டிகரை பொறியி யல் கல்லூரி பின் பகுதியில் தஞ்சமடைந் தது. வனத்துறையினர் தொடர்ந்து கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த யானை குடியிருப்பு அதிகமுள்ள பகு திக்குள் புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. இதையடுத்து அந்த பல்வேறு இடங் களில் சுற்றிவிட்டு, அன்னசாகரம் ஏரியில் தஞ்சமடைந்தது. இதன்பின் அங்கிருந்து ஆட் சியர் அலுவலகம் அருகே உள்ள ஏமக்குடி யூர் கிராமத்து விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானை மாயமானது. இரவு  நேரம் என்பதால் தேடும் பணியை நிறுத்திய  வனத்துறையினர், செவ்வாயன்று காலை  முதல் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.

2.74 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

2.74 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து சேலம், மார்ச் 5- சேலம் மாவட்டத்தில் 2.74 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக சுகா தாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் பாதிப்பை தடுக்கும் வகையில், ஆண்டிற்கு இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வந் தது. இந்நிலையில் தற்போது போலியோ நோய் இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் 2,356 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2  லட்சத்து 74 ஆயிரத்து 435 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகை யில், சேலம் சுகாதார மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 613 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 1 லட்சத்து 33 ஆயிரத்து 570 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆத்தூர் சுகாதார  மாவட்டத்தில் 81 ஆயிரத்து 582 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதில் 77 ஆயிரத்து 257 குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது,  என்றனர்.

மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில்  தண்ணீர் திறக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில்  தண்ணீர் திறக்கக்கோரி ஆட்சியரிடம் மனு சேலம், மார்ச் 5- மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி சங்ககிரி வட்டத்திற்குட் பட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சேலம் ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர். இதுதொடர்பாக அம்மனுவில் கூறியிருப்பதாவது, மேட் டூர் கிழக்குக்கரை வாய்க்கால் பாசனத்தை நம்பி சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின் றன. தற்போது வறட்சியான சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயி களும், பொதுமக்களும், கால்நடைகளும் குடிநீர் பற்றக்குறை யால் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன. எனவே, 15 நாட்க ளுக்கு குடிநீர் தேவைக்காக கிழக்குக்கரை கால்வாயில் தண் ணீர் திறந்துவிட வேண்டுமென வலியுறுத்தி அரசு அதிகாரி களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதேகோரிக் கையை வலியுறுத்தி அரசிராமணி, குள்ளம்பட்டி பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எந்தபயனும் ஏற்பட வில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் கிழக்குக்கரை வாய்க்காலில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டு மென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணை தாக்கிய காவலர் கைது

பெண்ணை தாக்கிய காவலர் கைது அவிநாசி, மார்ச் 5 – அவிநாசி அருகே பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிய காவலரை போலீசார் கைது செய்தனர். அவிநாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் வசித்து  வருபவர்  மகுடேஸ்வரன் (32). அவிநாசி காவல் நிலையத்தில்  காவலராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் நீலகிரி  மாவட்டம் ஊட்டியில் காவலராக பணியாற்றி வருபவர் வெங் கடேஷ் குமார் (30). இந்நிலையில் இவர்களுக்கிடையே ஏற் பட்ட தகராறில், வெங்கடேஷ் குமார் மகுடேஸ்வரன் மனைவி  ரோசாவை தகாத வார்த்தை பேசி தாக்கியுள்ளார். இது குறித்து  அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேஷ் குமாரை கைது செய்தனர்.

ரூ.4.89 கோடியில் இலவச வீட்டுமனை பட்டா

திருப்பூர், மார்ச் 5-  ரூ.4.89 கோடி மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப் பட் டாக்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல் விழி செல்வராஜ் செவ்வாயன்று வழங்கினார். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு  விழாவை முன்னிட்டு, 224 பயனாளிகளுக்கு ரூ.4.89 கோடி மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்  செவ்வாயன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ்,  தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன்,  திருப் பூர் மாநகராட்சி 1ஆம்  மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர்மன்றத்தலைவர் பாப்புக்கண்ணன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

புகையிலை  விற்பனை : கடைக்கு சீல்

புகையிலை  விற்பனை : கடைக்கு சீல் அவிநாசி, மார்ச் 5 - குன்னத்தூரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டிக் கடைக்கு போலீசார் திங்கட்கிழமை சீல்  வைத்தனர். கிருஷ்ணமூர்த்தி (54) என்பவர் குன்னத்தூர் - தொரவலூர்  சாலையில் பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது  கடையில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற  போலீஸார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் பெட்டிக் கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில்  விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்கள் வைத்தி ருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெட்டிக் கடைக்கு  சீல் வைக்கப்பட்டது. மேலும் உள்ளிருந்த 3 கிலோ புகை யிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரேசன் அரிசி பதுக்கியவர் கைது  1150 கிலோ அரிசி பறிமுதல் 

ரேசன் அரிசி பதுக்கியவர் கைது  1150 கிலோ அரிசி பறிமுதல்  திருப்பூர், மார்ச் 6- தண்ணீர் பந்தல் பகுதியில் ரேசன் அரிசி பதுக்கியவர் கைது  செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரிடமிருந்த 1150 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர், அவிநாசியை அடுத்த தண்ணீர்பந்தல் பகுதி யில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப் பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப் படையில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு அரசால்  இலவசமாக வழங்கக்கூடிய 1150 கிலோ ரேசன் அரிசி பதுக்கி  வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த வீட்டில் இருந்தவரிடம் போலீஸ் விசாரனை நடத்தினர். அதில்,  அவர் திருப்பூர் காந்திநகரை அடுத்த ஏ.பி நகர் பகுதியை  சேர்ந்த பிரகாஷ் (31) என்பதும், சுற்றுவட்டார  பகுதிகளில்  பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை  வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு வடமாநிலத்த வர்களுக்கு விற்பனை  செய்ய கடத்தி வைத்திருந்தது தெரி யவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து  பிரகாசை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த  1150 கிலோ ரேசன் அரிசி, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர்.

பிரதமர் மோடி செய்தது நாகரிகமானது அல்ல அமைச்சர் முத்துச்சாமி விமர்சனம்

கோவை, மார்ச் 5- ஒரு மாநில கட்சியை, ஒரு முதல்வரை நேரடியாக இல்லாத  குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரதமர் மோடி பேசுவது நாகரிகமானது இல்ல என அமைச்சர் முத்துசாமி பேசி னார். கோவை மாநகராட்சி, சிங்காநல்லூர் பகுதியில் செயல்ப டுத்தப்படவுள்ள சாலை மேம்பாட்டு திட்டம் மற்றும் குடிநீர்  திட்டம் ஆகியவற்றை அமைச்சர் முத்துசாமி செவ்வாயன்று துவக்கி வைத்தார். அவருடன் கோவை மாநகராட்சி மேயர்  கல்பனா, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,  மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அதி காரிகள் பங்கேற்றனர்.  இதனைத்தொடர்ந்து வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பேசிய  அவர்,”கோவை மாநகராட்சியில் 1178 பணிகள் செவ்வா யன்று ரூ.100 கோடி மதிப்பீட்டில் துவக்கி வைக்கப்படுகின்றது. இந்த பணிகள் விரைவாக முடிவடைய அதிகாரிகள் கண்கா ணித்து வருகின்றனர். சிறுவாணி அணையில் தண்ணீர் குறைந்துள்ள நிலையில் அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் போது சிக்கல்கள் வருகின்றது. அதையும் தாண்டி  குடிநீர் வழங்கும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.  பிரதமர் மோடி கொடுக்குறேன் என்பதை கொடுத்து விட்டு பேசினால், மக்கள் நம்புவார்கள். அவர் இன்னும் அதை  கொடுக்கவில்லை. (வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்தப டும் என்ற விவகாரத்தை சூசகமாக குறிப்பிட்டார்). தொடர்ந்து பேசிய அவர்,”இங்கு வந்து ஒரு பிரதமர் குற்றச்சாட்டு  வைத்து பேசுவது எப்போதும் பார்த்ததில்லை. ஒரு மாநில  கட்சியை, ஒரு முதல்வரை, ஒரு கட்சி தலைவரை நேரடியாக  வந்து, இல்லாத குற்றச்சாட்டை சொல்வது என்பது அவ்வ ளவு நாகரிகமானது அல்ல. அவர் பிரதமராக இருப்பதால் இதற்கு மேல் நாங்கள் சொல்வதும் நல்லது அல்ல என் றார்.

இணைப்புச் சாலையின் குறுக்கே சுவர் - ரயில்வே நிர்வாகம் கைவிட விதொச கோரிக்கை

கோவை, மார்ச் 5- தென்னக ரயில்வே பொது மேலாள ருக்கு, விவசாய தொழிலாளர் சங்கம் பொள் ளாச்சி தாலுகா குழு சார்பில் அனுப்பப்பட்ட மனுவில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஜமீன் ஊத்துக்குளியிலிருந்து, மீன்கரை சாலை வழியாக, குஞ்சிபா ளையம் கிராமத்திற்கு ஒரு இணைப்பு சாலை உள்ளது. சுமார் 300 ஆண்டுக ளுக்கு மேலாக இந்த சாலை மக்கள் பயன் பாட்டில் இருந்து வருகிறது. இச்சாலையை அப்பகுதியில் உள்ள விவசாயிகள், தொழி லாளர்கள், பொதுமக்கள் என பலர் பயன்ப டுத்தி வருகின்றனர்.  கடந்த சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு  இந்த இணைப்பு சாலையின் குறுக்கே மீட்டர்  கேஜ் ரயில் பாதை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த நிலையிலும் மேற்படி இணைப்பு சாலையில் தடை இன்றி போக்குவரத்து நடந்து வந்தது. தொடர்ந்து, மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்ட நிலையிலும், அந்த லெவல் கிராசிங் வழியாக போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில் தென்னக ரயில்வேயின் கீழுள்ள, பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வா கம், மேற்கண்ட ஜமீன் ஊத்துக்குளி, குஞ்சிபாளையம் இணைப்பு சாலையின் குறுக்கே, வடபுறம் தென்புறம் என இரண்டு  பக்கங்களிலும் சுவர் எழுப்ப நடவடிக்கை கள் எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை யால் ஜமீன் ஊத்துக்குளி – குஞ்சிப்பாளை யம் வழியேயான போக்குவரத்து முற்றி லும் முடங்கும். இச்சாலையை பயன்படுத்தி வந்த  கிராம மக்கள், விவசாயிகள், தொழிலா ளர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.  மேற்கண்ட இணைப்புச் சாலையை, தார் சாலையாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு  முயற்சிகளை எடுத்து வரும் சூழலில், தென் ்னக ரயில்வே நிர்வாகத்தின் கட்டுப்பாட் டில் உள்ள பாலக்காடு கோட்ட ரயில்வே நிர்வாகம் பாதையை முற்றிலும் மறைக்க வழி வகை செய்து வருவது, முற்றிலும் தவ றானது. எனவே, பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, இணைப்பு சாலையின் குறுக்கே சுவர்  எழுப்பும் முயற்சியை நிறுத்தம், நடவடிக்கை  எடுக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.

ரயில் நிலைய நடைபாதையை  பொதுமக்கள் பயன்படுத்த அனுமதித்திடுக

உதகை, மார்ச் 5- கேத்தி ரயில் நிலைய நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியரி டம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து ராஜ்குமார் நகர், பாரதி நகர் பகுதி மக்கள் ஆட்சியர் அருணாவிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட ராஜ்குமார் நகர், பாரதி நகரில் ஏராளமான குடும்பங் கள் வசித்து வருகின்றனர். நாங்கள் கேத்தி  ரயில் நிலைய நடைபாதையை கடந்த 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். இந்த நடைபாதையையே பள்ளி மாண வர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கேத்தி ரயில் நிலையத்தில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ரயில் நிலையை எல்லையை சுற்றிலும் வேலி  அமைப்பதாக தெரிகிறது. மேலும், இந்த நடைமேடையை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். எனவே, கடந்த 60 ஆண்டுகளாக இவ்விரு  கிராம மக்களும் பயன்படுத்தி வந்த நடைபா தையை தொடர்ந்து பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதிக்க வேண்டும், இதனை  மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு ஏற்ப டுத்தித்தர வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

யானை தாக்கி மூதாட்டி பலி

கோவை, மார்ச் 5- பேரூர் அருகே ஆறுமுக கவுண்டனூரில், காட்டு யானை தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதி  மக்களிடையே அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பேரூர் அருகே உள்ளது ஆறுமுக கவுண்டனூர். இந்த  பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம்  அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலை யில், இந்தப் பகுதியில் உள்ள கருப்பரா யன் கோவில் அருகே 61 வயது மதிக்கத் தக்க மூதாட்டி ஒருவர், உயிரிழந்து கிடப்ப தாக தகவல் வெளியாகியது. இதையடுத்து வனத்துறை மற்றும் பேரூர் காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டனர். பின்னர், மூதாட்டியின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆய்வில், காட்டு யானை  தாக்கி மூதாட்டி உயிரிழந்தது தெரியவந் தது. இதைத்தொடர்ந்து, போலீசார் அந்த  மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்கு  பதிவு செய்த போலீசார் அந்த மூதாட்டி யார்?  என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின் றனர். ஆறுமுக கவுண்டனூரில், காட்டு யானை  தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் அப்ப குதி மக்களிடையே பரபரப்பையும் அச்சத் தையும், ஏற்படுத்தியுள்ளது.

இலை புள்ளி நோய் தாக்கம் மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை

கோபி,மார்ச்.5- ஈரோடுமாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி பாசன  பகுதியான தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம்  15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் நெல் சாகு படி செய்து வருகின்றனர் இந்நிலையில் கோபி சுற்றுவட்டார பகுதிகளான நஞ்சைபு ளியம்பட்டி, புதுக்கரைப்புதூர், நஞ்சைகோபி, கூகலூர் உள் ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகு படி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது நெற்ப யிர்களில் கதிர் விட்டு வரும் நிலையில், நெற்பயிர்களில் இலை  உறை அழுகல், இலை புள்ளி, உள்ளிட்ட நோய் தாக்கம்  காணப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள் ளனர்  இதில் பாரியூர், நஞ்சைகோபி, புதுக்கரைபுதூர், கூகலூர்  பகுதியில் நோய் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது இந் நோய் தாக்குதல். குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி  ஒருவர் இலைப்புள்ளி தாக்குதல் தென்பட்ட நெற்பயிருடன் வேளாண்மை அலுவலகத்திற்கு வந்து தெரிவித்தார் பின்னர் விவசாயிகள் கூறுகையில், கோபி சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர்கள் கதிர் விட்டு வளர்ந்து வருகிறது.  தற்போதைய நிலையில், நெற்பயிரில் இலை உறை அழு கல், இலைபுள்ளி நோய் தாக்கி வருகிறது. இதனால் மக சூல் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவுகிறது. இதற்கு வேளாண்துறை அதிகாரிகள் தீர்வு காண வேண் டும் என்றனர். இதுகுறித்து கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் முரளி கூறுகையில், கோபி வட்டாரத்தில் தடப்பள்ளி பாச னப் பகுதியில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல்  சாகுபடி செய்துள்ளனர் பருவநிலை மாற்றத்தின் காரண மாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், ஒரு சில  நோய்கள் பயிர்களை தாக்கி சேதம் விளைவிக்கும் வாய்ப்பு  உள்ளது. நெற்பயிரில் குலை நோய் தென்பட அதிக வாய்ப்பு  உள்ளது. தற்பொழுது நெற்பயிரில் இலை உறை அழுகல், இலைப்புள்ளி நோய் அறிகுறிகள் காணப்படுகிறது.  நெற்பயிரில் தண்ணீர் நிற்கும் மட்டத்திற்கு சிறிய கருப்பு  நிறப் புள்ளிகள் தோன்றி அவை ஒன்றினைந்து நெற்ப யிரை பழுப்பு நிற திட்டுகளாக மாற்றுகிறது. இதனால், நெற்ப யிரின் அடிப்பகுதியில் உள்ள இலைகள் காய்ந்து விடு கிறது. இலை உறை நோயால் கதிர்கள் பழுத்து காய்ந்து  விடுகிறது வயலில் அடிகசகசப்பு அதிகமாக இருப்பின் நெல் பயிரில் இலைப் புள்ளி நோய் முதலில் மிகச்சிறிய பழுப்பு புள்ளிகளாகத் தோன்றி உருளை அல்லது முட்டை  வடிவமாக இருந்து வட்டவடிவ புள்ளியாக மாறுகிறது. இத னால், கதிரின் கழுத்து பகுதியை தாக்கி நெற்பயிர் மடிந்து நோய் தாக்கப்பட்ட விவசாய பயிர் முழுவதும் பழுப்பு நிற  பயிர்களாக மாறி நோய் தாக்குகிறது. இதனால் 50 சதவீ தம் மகசூல் குறைவு ஏற்படும் தழைச்சத்து மற்றும் சாம்பல்  சத்து குறைபாடு கொண்ட நடவு வயலில் நோயின் தீவி ரம் சற்று அதிகமாக காணப்படும் என்றார்.

உதகையில் தண்ணீர் இருப்பு குறைந்தது

உதகையில் தண்ணீர் இருப்பு குறைந்தது உதகை,மார்ச் 5- நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் உள்ள 36 வார்டுக ளில், 2 லட்சத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகள், வணிக நிறுவ னங்கள் உள்ளன. இவற்றுக்கு உள்ளூரில் உள்ள ஒன்பது  நீர் தேக்கங்களில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்தாண்டு எதிர்பார்த்த அளவு பருவ மழை பெய்யவில்லை.  இதனால், மாவட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள அணை கள், தடுப்பணைகளில் தண்ணீர் படிப்படியாக குறைந்து வரு கிறது. மேலும் நடப்பாண்டு தொடக்கத்தில் நிலவிய பனிபொ ழிவையடுத்து, வறட்சியான காலநிலை நிலவுகிறது.  ஜனவரி முதல் ஏப்ரல் வரை  30 செ.மீ., கோடை மழை  பெய்யும். இந்த மழை, 15 செ.மீ., அளவுக்கு பெய்தால் மட் டுமே நடப்பாண்டு கோடை காலத்தில் நிலவும் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். மேலும், திங்களறு நிலவரப்படி, உதகை நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள பார்சன்ஸ்வேலி 21 அடி (இருப்பு  50 அடி), மார்லிமந்து 10(23), டைகர் ஹில்30(39),  ஓல்டு உதகை,  5(6), கிளன்ராக் 6(7) அடி வரை உள்ளிட்ட அணைகளில் தண் ணீர் இருப்பு உள்ளது. உதகையில், கடந்தாண்டை விட நடப்பாண்டில் அனைத்து அணைகளிலும் 5 அடி வரை தண்ணீர் குறைந் துள்ளது. தொடர்ந்து வறட்சியான கால நிலை நிலவும்  பட்சத்தில் இருப்பில் உள்ள தண்ணீர் மேலும் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. சமவெளி மற்றும் பிற மாநில சுற்றுலாப் பயணிகள் கணிச மாக வர வாய்ப்புள்ளது. அந்த சமயங்களில் குடிநீர் தேவை  வழக்கத்தை விட அதிகரிக்க கூடும் என்பதால், நகராட்சி நிர்வா கம் தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டி கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையர் ஏகராஜ் கூறுகையில், கடந்தாண்டை பார்க்கும் போது பார்சன்ஸ் வேலி,  மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலா உள்ளிட்ட முக்கிய  நீராதாரங்களில் தண்ணீர் குறைந்துள்ளது. கோடை சீசனில்  தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். என்றார்.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து பாலக்கோடு அரசு மருத்துவமனை சாதனை

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து பாலக்கோடு அரசு மருத்துவமனை சாதனை தருமபுரி, மார்ச் 5- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள முதலிப் பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சின்னசாமி (60). இவர் கடந்த 5 ஆண்டுகளாக கால் மூட்டு எலும்பு தேய்ந்து நடக்க முடியாமல் அவதியடைந்து வந்தார். கடந்த மார்ச் 1  ஆம் தேதியன்று பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தபோது, இவரை பரிசோதித்த மருத்து வர்கள் செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை செய்ய வேண் டும் என கூறினர். அதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம்  சின்னசாமிக்கு இலவசமாக மூட்டு மாற்று அறுவை  சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சின்னசாமி தற்போது சொந்த காலில் நடந்து  மகிழ்ச்சி அடைந்தார். இதுபோன்று அறுவை சிகிச்சைகள் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே மேற் கொள்ளப்பட்டு வந்த நிலையில், தாலுகா மருத்துவ மனையில் செய்யப்பட்டது நோயாளிகளிடையே மகிழ்ச்சி யையும், நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையறிந்த தருமபுரி மாவட்ட ஊரக நலப்பணிகள் மற்றும் சுகா தார இணை இயக்குநர் சாந்தி, பாலக்கோடு அரசு மருத்து வமனையில் உள்ள சின்னசாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதனைத்தொடர்ந்து தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் வசந்தராஜ், கார்த்திக், மயக்க மருந்து சிகிச்சை நிபுணர் சிலம்பரசன், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெக தீசன், மருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகேசன் மற்றும்  செவிலியர்களுக்கு வாழ்த்துக்கூறி, பாராட்டு தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து சாந்தி கூறுகையில், இதுபோன்ற மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள தனியார் மருத்துவமனையில் ரூபாய். 2 லட்சம் வரை செலவாகும். ஆனால் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தற்போது  மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, கர்ப்பபை அறுவை சிகிச்சைகள் போன்றவை இலவ சமாக சிறப்பான முறையில் செய்து வருவதால், பொது மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அடிப்படை வசதிகேட்டு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

சேலம், மார்ச் 5- சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடிப் படை வசதிகளை நிறைவேற்றி தர வேண் டும் என ரயில்வே கூட்ஷெட் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சிஐடியு தமிழ்நாடு சுமைப்பணி சம்மே னத்தின், ரயில்வே கூட்ஷெட் சுமைப்பணி  தொழிலாளர்கள் சங்க மாநில ஒருங்கிணைப் புக்குழு கூட்டம், சம்மேளன துணைத்தலை வர் எ.கோவிந்தன் தலைமையில் சிஐடியு சேலம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடை பெற்றது. இதில் சம்மேளன மாநிலத் தலை வர் ஆர்.வெங்கடபதி, மாநில பொதுச்செ யலாளர் இரா.அருள்குமார், மாநிலப் பொரு ளாளர் பி.குமார் உட்பட பலர் கலந்து கொண் டனர். இக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்க ளில் உள்ள ரயில்வே கூட்ஷெட்டிலிருந்து பல் வேறு தொழிற்சங்கத்தின் கிளை நிர்வாகி கள் பங்கேற்று கருத்துக்களையும், ஆலோச னைகளையும் முன்வைத்தனர். அதன்பின்,  ரயில்வே கூட்ஷெட் சுமைப்பணி தொழிலா ளர்களுக்கான வேலை பாதுகாப்பு, குறைந் தபட்ச கூலி, அடையாள அட்டை, குடிநீர், கழி வறை போன்ற அடிப்படை கோரிக்கை களை ரயில்வே கூட்ஷெட் நிர்வாகம் நிறை வேற்றி தர வேண்டும். மேலும், ஒன்றிய அர சின் தனியார்மயத்தை எதிர்த்தும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும்,  அதற்கான முன் தயாரிப்பு வேலைகளுக்காக விரிவடைந்த மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடத்தி திட்டமிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நூல் உற்பத்தியை குறைக்க : நூற்பாலை உரிமையாளர்கள் முடிவு

நாமக்கல்,மார்ச் 5- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தனியார் மண்டபத்தில் விஸ்கோஸ் ரயான் நூற்பாலை உரிமையாளர்கள் கூட்டம் நடை பெற்றது. இதில் பல்லவா குரூப் நிறுவனங் களின் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் நூற்பாலை தொழிலின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பள்ளிபாளையம், ஈரோடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பெரிதும் சிறி துமாக ஏராளமான நூற்பாலைகள் இயங்கி  வருகிறது. இது கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நூல் விலை குறைந்து கொண்டே  வருவதால், துணி மற்றும் நூல் வியாபாரம்  பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்  செய்பவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி  உள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு புதி தாக அமல்படுத்தியுள்ள வருமான வரித் துறை சட்டம் (எம்எஸ்எம்இ) காரணமாக வாங்கும் பொருளுக்கு 45 நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டி உள்ளதால் ஜவுளி  தொழில் மேலும் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் ரயான் நூல்களை கடும் விலை  சரிவை சந்தித்துள்ளது. எனவே வேறு வழி யின்றி ரயான் நூல்களின் வீழ்ச்சியை நிலைப் படுத்த, 30 சதவீதம் வரை உற்பத்தியை நிறுத் துவது எனவும், அதன் பிறகு நிலைமை சரியா கவில்லை எனில் மீண்டும் கூடி அடுத்த  கட்ட நடவடிக்கைகள் எடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது.