districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

நாமக்கல், ஜன.29- நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வெளி யிட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது, நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர் களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும். கடந்த 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டப்படி தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டு நர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை இயக்கு வதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நடைமுறை பட்டறிவு பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு பழங்குடியின பிரி வினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானோர் 2023 ஜூலை 1 ஆம் தேதி 18  வயதை பூர்த்தியடைந்தவராகவும், 42 வயதிற்குட்டவராகவும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை namakkal.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சான்றொப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும்  ஜன.31 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப் பங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக 3 ஆவது தளத்தில் உள்ள வளர்ச்சிப் பிரிவில் அலுவலக வேலை நாள் களில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவே விண்ணப் பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

அவிநாசி, ஜன.29- அவிநாசி அருகே உள்ள சாவக்கட்டுப்பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய் யப்படுவதாக சேவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாவக்கட்டுப்பாளையத்தில் உள்ள மளி கைக் கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டு, விற்ப னைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருட் களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, கடை உரி மையாளர் செல்வராஜ் மகன் மேர்வின் (40) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

டிஎன்பிஎஸ்சி புள்ளியல் தேர்வு கோவையில் 1,415 பேர் எழுதினர்

கோவை, ஜன.29- டிஎன்பிஎஸ்சி புள்ளியல் தேர்வினை கோவை மாவட்டத் தில் 1,415 பேர் எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன் பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் - 3ஏ பதவிக் கான எழுத்து தேர்வு தமிழகத்தில் சனியன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஞாயிறன்று தமிழ்நாடு ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் புள்ளியியல் உதவி ஆய் வாளர் பதவியில் 211 பேர், கணக்காளர் - 5, புள்ளியியல் தொகுப் பாளர் ஒருவர் என மொத்தம் 217 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஞாயிறன்று 15 மாவட்டங்களில் நடைபெற்றது. இதற் கான தேர்வு மையங்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டி ருந்தன. கோவையில் 10 தேர்வு மையங்களில் இந்த தேர்வா னது நடைபெற்றது. தேர்வு எழுதுவதற்காக தேர்வர்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர். முன்னதாக, தேர் வர்களுடைய நுழைவு சீட்டை அதிகாரிகள் சரி பார்த்தனர். இதில், ஹால் டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையங்களுக்கு வராதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையத்தில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கண் காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தேர்வு  மையங்களில் வீடியோ மூலமும் தேர்வு கண்காணிக்கப்பட் டது. இந்த தேர்வு காலை, பிற்பகல் என 2 கட்டமாக நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. பிற்பகலில் 2.30 மணி முதல் 5.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. கோவையில் 2 ஆயிரத்து 831 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில், 1,415 பேர் மட்டுமே  தேர்வு எழுத வந்திருந்தனர். 1,416 பேர் தேர்வு எழுத வர வில்லை.

ஓடும் பேருந்தில் பணத்தை திருடிய 2 பேர் கைது

கோவை, ஜன.29- கோவையில் ஓடும் பேருந்தில் கல்லூரி  மாணவிடம் பணத்தை திருடிய 2 பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், சிங்காநல்லூர், தேவேந்திர வீதியைச் சேர்ந்தவர் கலைச் செல்வி (24). கோவை அரசு கலைக்கல்லூரி யில் முனைவர் பட்டம் படித்து வரும் இவர், சிங்காநல்லூரிலிருந்து அரசு பேருந்தில் தனது தாயாருடன் சென்று கொண்டிருந்தார். இதன்பின் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப் போது கலைசெல்வி தனது பணப்பையை எடுக்க முயன்றார். ஆனால், பையை காண வில்லை. அந்த பையில் 2 ஏடிஎம் கார்டுகள் மற் றும் ரூ.84 ஆயிரத்து 450 ரொக்கம் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் மீண் டும் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த 2  பெண்கள் அவர்களை பார்த்ததும் தப்பி யோட முயற்சி செய்தனர். இதனால் சந்தேக மடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் அந்த பெண்களை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணை யில், அந்த 2 பெண்களும் பேருந்தில் கலைச் செல்வியின் பணப்பையை திருடியது தெரிய வந்தது. இதன்பின் திருட்டில் ஈடுபட்ட கிருஷ் ணகிரி, சந்தைப்பேட்டை வீதியைச் சேர்ந்த  லட்சுமி (40), சித்ரா (30) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நடக்க இருப்பவை

தேசப்பிதா சுட்டுக்கொல்லப்பட்ட நாள் சிறப்பு கருத்தரங்கம் நாள்: 30.01.2023 திங்கள் நேரம்: மாலை 5.30 மணி இடம்: டால்பின் ஹால், அண்ணா சிலை அருகில், பெருந்துறை கருத்துரை: த.ஸ்டாலின் குணசேகரன் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஏற்பாடு: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை.

திருப்பூர் புத்தக திருவிழாவில் 50 சிறுவர் நூல்கள் வெளியீடு

திருப்பூர், ஜன. 29 - தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் திருப்பூர் புத்தகத்  திருவிழா 2023இல் பள்ளி மாணவர்களுக்கான காலை நேர  கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை லிங்ஸ் எஸ்.காதர் கான் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவியல் இயக்கத்தை சேர்ந்த ராணி ராமமூர்த்தி வரவேற்றார். வழக்கறிஞர் எஸ். கண்ணன்  முன்னிலை வகித்தார். மாவட்ட நூலகர் வே. மாதேஸ்வரன் வாழ்த்தி பேசினார். 50 சிறுவர் நூல்களை  குழந்தைகள் வெளியிட, பள்ளி மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். எழுத்தாளர் சி.சரிதா ஜோ, ‘பாலின சமத்துவம்’ குறித்து  பல்வேறு செயல்பாடுகளுடன் மிகச் சிறப்பாக கதைகள் வாயி லாக மாணவர்களிடையே உரையாற்றினார். அவர் எழுதிய சின்ன வாத்தியார் என்கிற புத்தகம் குழந்தைகளால் வெளி யிடப்பட்டது.  எழுத்தாளர் மாலதி வைத்தியநாதன்  எழுதிய, அங்கில்  சஞ்சீவி நூல் குழந்தைகளால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர்  மோ.கணேசன் எழுதிய மயில் போட்ட கணக்கு, வாலுவின் ஜாலிப் புதிர்கள் என்ற நூல்களும் குழந்தைகளால் வெளி யிடப்பட்டது. 13 பள்ளிகளில் இருந்து 534 மாணவர்களும், 62 ஆசிரியர் களும் கலந்து கொண்டனர்.

உடுமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை  அங்கேயே தொடர அமைச்சருக்கு சிபிஎம் கடிதம்

திருப்பூர், ஜன.29 - உடுமலை மின்பகிர்மான வட்ட  மேற்பார்வை பொறியாளர் அலுவல கத்தை பொள்ளாச்சிக்கு இடம் மாற்றம் செய்யாமல் உடுமலையில் தொடர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் வே.செந்தில்பாலாஜிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ. முத்துக்கண்ணன் சனியன்று அனுப் பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:  உடுமலை மின்பகிர்மான வட்டத் தில் விவசாயம், தொழிற்சாலை, விசைத்தறி, வீட்டு உபயோகம் என  சுமார் 5.5 லட்சம் மின் இணைப்பு கள் உள்ளன. கடந்த 1975ஆம் ஆண்டு கோவை மின் பகிர்மா னத்தில் இருந்து பிரித்து உடுமலை திருப்பூர் சாலையில் 15 ஏக்கர் பரப் பளவு நிலத்தில் தனியாக அலுவல கத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் திறந்து வைக்கப்பட்டது.   கோவைக்கு அடுத்தப்படியாக பெரிய மின்பகிர்மான வட்டமாகவும், ஒருங்கிணைந்த கட்டடங்களுடன் செயற்பொறியாளர் அலுவலகம், மேற்பார்வையாளர் அலுவலகம், உதவி பொறியாளர் அலுவலகம் என ஒரே வளாகத்தில் செயல்படுகிறது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக உடு மலையில் செயல்பட்டு வரும் அலு வலகத்தை பொள்ளாச்சியில் 3 மாதத் திற்குள் வாடகை கட்டிடத்தில் இயங்கும் வகையில் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிகிறோம். இது பெரும் அதிர்ச்சி தரும் உத்தரவாக உள்ளது.  உடுமலை பகுதியில் உள்ள அரசு  கூட்டுறவு அமராவதி சக்கரை ஆலை,  காகித ஆலைகள், பஞ்சாலைகள் என தொழில் சார்ந்தும், விவசாயத் திற்கும், உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவிகரமாக இருந்து வரு கிறது. உடுமலை மின் பகிர்மான வட்டத் தில் உடுமலை வருவாய் கோட்டத் திற்குட்பட்டே அதிக மின் இணைப்பு கள் உள்ளன.  தற்போது பொள்ளாச்சி பகுதி யில் தேவை அதிகரித்து இருப்பின்  அங்கு கூடுதலாக புதிய மேற்பார் வையாளர் பணியிடத்தினை உரு வாக்கி, அமைத்திடலாம்.  பெரும் பகுதி மக்களின் எதிர்ப் பிற்கு இடையில் எந்தவிதமான கார ணமும் இல்லாமல் தற்போது செயல் பட்டு வரும் உடுமலை மின் பகிர்மான  மேற்பார்வையாளர் அலுவல கத்தை பொள்ளாச்சிக்கு மாற்றா மல் உடுமலையில் தொடரவும், பொள்ளாச்சியில் புதிய மேற்பார்வை யாளர் பணியிடம் உருவாக்கி செயல் படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுவின் சார்பில் செ. முத்துக்கண்ணன் கேட்டுக் கொண் டிருக்கிறார்.

அரசு மருத்துவமனையில்  அடிப்படை வசதிகளை நிறைவேற்றுக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

உடுமலை, ஜன.29- மடத்துகுளம்  அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் அடிப்படை வசதிகளை  நிறைவேற்றுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில் 24 மணி நேரம் செயல்படும் அரசு மருத்துவ மனை உள்ளது. இம்மருத்துவமனை திருப்பூர் - திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லை பகுதியாக உள்ளதால் திண்டுக்கல் மாவட் டத்தின் சாமிநாதபுரம் முதல் தாளையம் கிராமங்கள் வரையில் உள்ள  மக்கள் மற்றும்  மடத்துகுளம் தாலுகா பகுதி மக்கள் என  லட்சக்கணக்கனோர் தங்களுடைய  மருத்துவ தேவைகளுக்கு சுமார் 20 கிலோ  மீட்டர் தொலைவில் உள்ள உடுமலை நக ருக்கு வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால்தான் ஆரம்ப சுகாதார நிலைய மாக இருந்து, பின்னர் தரம் உயர்த்தப்பட்டன. இதற்காக புதிய கட்டிடம் கடந்த 2016 ஆம் ஆண்டு மருத்துவமனை வளாகத்திலே அமைக்கப்பட்டது. இதில் ரூ.30 லட்சம் ஒதுக்கீட்டில் 30 படுக்கையறை கொண்ட புதிய மருத்துவமனை கட்டப்பட்டன.  இம்மருத்துவமனைக்கு குறைத்தபட்சம் எட்டு மருத்துவர்கள் தேவை, ஆனால் மூன்று  மருந்துவர்கள் மட்டுமே உள்ளனர். இதே போல் ஷிப்டுக்கு ஐந்து செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் பராமரிப்பு ஊழி யர்கள், மருந்துகள் என பற்றாக்குறையாக உள்ளது. எனவே, மக்களின் நலனை கருத்தில்  கொண்டு 24 மணி நேரம் செயல்படும் மருத்து வமனைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவி லியர்கள், மருந்துகள் என அடிப்படை வசதி களை மேம்படுத்த தமிழ்நாடு சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

இலவச கண் சிகிச்சை முகாம்

திருப்பூர், ஜன.29 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு-2 சார்பாக தத்தெடுத்த கிராமமான கருமா பாளையத்தில் ஏழு நாட்கள் இலவச கண் சிகிச்சை சிறப்பு  முகாம் சனியன்றுயன்று தொடங்கியது. இம்முகாமில் இரண்டாம் நாளான ஞாயிறன்று கருமா பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் திருப்பூர் சிக்கண்ணா  அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2ம்  இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.  இம்முகாமில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கி ணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மெஜஸ்டிக் கந்தசாமி கலந்து கொண்டு கண்  சிகிச்சை முகாமினை துவக்கி வைத்தார். இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதில் 15 பேருக்கு கண்புரை, 4 பேருக்கு நரம்பு  சம்பந்தமான கண் வியாதிகள், 3 பேருக்கு கண்ணில் சதை  வளர்ச்சி போன்றவை கண்டறிப்பட்டது. அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.