districts

img

மேட்டூர் காவிரி - சரபங்கா நீரேற்ற திட்டம்: விவசாயிகளுக்குப் பாதிப்பின்றி நீர்வழிப்பாதையில் செயல்படுத்துக

சேலம், மார்ச் 9- மேட்டூர் காவிரி - சரபங்கா நீரேற்ற திட்டத்தை விவசாயிகளுக்குப் பாதிப் பின்றி நீர்வழிப்பாதையில் செயல்படுத்த நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பொதுநிறுவனங்கள் குழுவிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2021-22  ஆண்டிற்கான பொது நிறுவனங்கள் குழு வின் ஆய்வுக்கூட்டம், அக்குழுவின் தலைவர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் சேலம் மாவட்டத்தில் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இருநாட்கள் நடைபெற்றது. அப் போது, காவிரி-சரபங்கா நீரேற்றத் திட்டம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார் பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதா வது, காவிரி உபரிநீரை சேலம் மேற்கு மாவட் டத்தில் நங்கவள்ளி, மேச்சேரி, ஓமலூர், தாரமங்கலம், மகுடஞ்சாவடி, கொங்கனா புரம், எடப்பாடி ஆகிய ஒன்றியங்களில்  உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளை தவிர்த்து விட்டு, குறிப்பிட்ட 100 ஏரிகளில் மட்டும் எடுத்து செல்லும் திட்டம் நடைபெற்று வரு கிறது. சென்ற அதிமுக ஆட்சியில் இத்திட் டம் துவங்கப்பட்டு, திறப்பு விழாவும் நடத்தப் பட்டு விட்டது. ஆனாலும், அது இன்னும் முழுமை பெறவில்லை. இத்திட்டம் காவிரி- சரபங்கா உபரி நீரேற்றத் திட்டம் என கூறப் படுகிறது.

ஆனால், உண்மையில் அவ்வாறு  இல்லை. உபரிநீர் என்பது மேட்டூர் அணை யின் கொள்ளளவான 120 அடிக்கும் மேல்  வரும் நீர்தான். அந்த உபரிநீர் 16 கண்மாய்  மூலம்தான் (பதினாறு பிரிட்ஜ்) வெளியேற்றப் படுகிறது. இத்திட்டம் உபரிநீர் பாசனம் எனில், இந்த பதினாறு கண்மாய் பகுதி யில் இருந்துதான் எடுக்கப்பட வேண்டும்.  ஆனால், இதற்கு மாறாக கோனூர் ஊராட்சி திப்பம்பட்டி பகுதியில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது. அங்கு காவிரிநீர் மிகப் பெரும் கிணற்றில் நிரப்பப்படுகிறது. அக் கிணற்றில் நீர் நிரப்பவும், கிணற்றில் இருந்து நீரை வெளியே ஏரிகளுக்கு எடுக்க வும் சக்திமிக்க மோட்டார் பம்புகள் பயன் படுத்தப்படுகிறது. இதுபோன்ற மோட்டார் பம்புகள் பல ஏரிகளிலும் பொறுத்தப்பட உள்ளது. மேலும் இயற்கைக்கு மாறாக கீழ் பகுதியில் இருந்து மேல்பகுதிக்கு நீரேற் றம் செய்யப்படுகிறது. மேலும், நீர் நீர்வழிப் பாதையில் எடுத்து செல்லப்படாமல், விவ சாயிகளின் பட்டா விளைநிலங்களின் வழி யாக எடுத்து செல்லப்படுகிறது. இதற் காக, விளைநிலங்களில் தாறுமாறாக குறுக்கு, நெடுக்குமாக வாய்கால் வெட் டியோ அல்லது குழாய் பதித்தோ எடுத்து செல்லப்படுகிறது. இதனால் விளைநிலங் கள் பயன்பாடின்றி வீணாக போகும் நிலை யும் உள்ளது.

இத்திட்டத்தால், சாதாரண ஏழை, எளிய  விவசாயிகளின் பனைமரம் 1361, தென்னை மரம் 2487, பழவகை மரங்கள் 1550, தேக்கு மரம் 809, வேம்புமரம் 2009, சந்தனமரம் 21, செம்மரம் 9, இதரவகை மரங்கள் 1246 என மொத்தம் 9492 மரங்கள் அழிக்கப்படுகிறது.  இதேபோல், விளைநிலம் 275 ஏக்கர், ஆழ் குழாய் கிணறுகள் 36, கிணறுகள் 16, வீடுகள் 11, குளியல் அறைகள் 5 என அழிக்கப்படு கிறது. இதன்காரணமாக 2500க்கும் மேற் பட்ட விவசாயிகளும், அவர்தம் குடும்பங் களும் பாதிக்கப்படுவார். இதன்மூலம், இது  காவிரி நீரை பயன்படுத்தும் திட்டமாகத் தான் தெரிகிறது; காவிரி உபரிநீரை பயன் படுத்தும் திட்டமாக தெரியவில்லை.  மேலும், இத்திட்டத்தின் வாயிலாக சேலம் மாவட்டத்தில் பரவலாக சிறு, குறு நடுத்தர விவசாயிகளாவது பயன் பெறுகிறார் களா என்றால், அதுவும் இல்லை. முழுக்க முழுக்க இத்திட்டம் எடப்பாடி தொகுதியி லும், அதிலும் குறிப்பாக கொங்கணாபுரம், எடப்பாடி ஒன்றியங்களில்தான் இத்திட்டத் தின் பெரும்பகுதி வருகிறது. இத்திட்டத் தால் பயன்பெறும் என்று எதிர்பார்க்கிற 4 ஆயிரம் ஏக்கர்களில், 3 ஆயிரம் ஏக்கர்கள் இந்த இரு ஒன்றியங்களில் தான் வருகிறது. இந்த இரு ஒன்றியமும் எடப்பாடி தொகுதியில் வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் நிலத்திற்கும், அவரது உறவினர் மற்றும் பினாமி நிலத்திற்குமே பயன்படும் வகையில் திட்டம் வடிவமைக் கப்பட்டு உள்ளது.  

இத்திட்டமும் சேலம் மாவட்டத்தில் “எடப் பாடியின் கனவுத்திட்டம்” என்றே அழைக்கப் பட்டது. அதுபோல் இத்திட்டத்தால் உபரி நீரை கொண்டு சேர்க்கப்படும் 100 ஏரிகளில் ஏறக்குறைய 75 சதவிகித ஏரிகள் எடப்பாடி வட்டத்தில் மட்டுமே வருகிறது. ஆகவே, முழுக்க முழுக்க முன்னாள் முதல்வர் எடப் பாடி கே.பழனிசாமி மற்றும் அவரின் பினாமி களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டது. இதனால் சுமார் 2500 விவசாயிகள், தங்க ளின் விளைநிலங்களை இழந்து தவிக் கும் நிலை ஏற்பட்டுள்ளது.  ஆகவே, இத்திட்டம் மூலம் சேலம் மேற்கு மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தவிர மற்ற விவ சாயிகளுக்கு பயன் ஏதுமில்லை. காவிரி டெல்டா பாசன பகுதியிலும் இத்திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையில் தான் சென்ற ஆட்சியில் அவசர அவசரமாக பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் திறப்புவிழா நடத்தப்பட்டது.

இத்திட்டத் தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கொரோனா காலத்திலும்கூட தங்களின் உயிர்களை பிணையம் வைத்து  போராடினார்கள். விவ சாயிகளிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி யும், காவல்துறை மற்றும் வருவாய் துறை களை வைத்து மிரட்டியும் அசுர வேகத்தில் திட்டப்பணிகள் நடத்தப்பட்டன. ஆனால், விவசாயிகளின் குறைகளை அன்றைய அதிமுக அரசு தனது காதுகளில் வாங்கிக் கொள்ளவே இல்லை. எனவே, இத்திட் டத்தை விளைநிலங்களின் வழியே செயல் படுத்தாமல், நீர்வழிப்பாதை (ஓடை புறம் போக்கு) வழியே செயல்படுத்திட வேண்டு மாய் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சேலம் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்வ தாக அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவினை தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எ.ராம மூர்த்தி, மாவட்டத் துணைத்தலைவர் பி. தங்கவேலு மற்றும் மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் குமார், கதிர்வேல் உள்ளிட்டு பலர் இருந்தனர். முன்னதாக. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயல்பாடுகள் குறித்து அமைக்கப்பட்டி ருந்த அரங்கத்தை சட்டமன்ற பொது நிறு வனங்கள் குழுவினர் பார்வையிட்டனர்.  அப்போது, ஆய்வு கூட்டத்திற்கு வந்த உறுப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் எஸ். கார்மேகம் பொன்னாடை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் கௌரவித்தார். இந்நிகழ்ச்சி யில் சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவ னங்கள் குழு உறுப்பினர்கள் வி.பி.நாகை  மாலி, கிருஷ்ணசாமி, ஆர்.டி.சேகர், நிவேதா எம்.முருகன், எஸ். எஸ். பாலாஜி, ரூபி  மனோகரன், எஸ் ஜெயக்குமார், குழுவின் சிறப்பு பணி அலுவலர் எம். எல். கே.ராஜா உள்ளிட்டு தொடர்புடைய அலுவலர்கள் பங் கேற்றனர்.