districts

img

டாஸ்மாக் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப்போக்கு

ஈரோடு, செப்.2- பணி நிரந்தர வழக்கில் ஆஜ ராகாமல் டாஸ்மாக் நிர்வாகம் தொழி லாளர் விரோத அணுகுமுறையில் செயல்படுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியுவினர் மனு அளித்தனர்.  ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில், சிஐடியு ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் ந.முரு கையா தலைமையில், பொதுச் செயலாளர் வை.பாண்டியன், பொரு ளாளர் ரவிச்சந்திரன் மற்றும் சிஐ டியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ர மணியன் ஆகியோர் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் அரசு மது பான சில்லரை விற்பனைக் கடை கள் 183 உள்ளன. இக்கடைகளில் மேற்பார்வையாளர், விற்பனையா ளர், உதவி விற்பனையாளர் என்ற  பிரிவுகளில் சுமார் 1050 பேர் பணி யாற்றி வருகின்றனர். இந்த ஊழி யர்கள் கடந்த 2003ஆம் ஆண்டு  முதல் வேலை செய்து வருகின்ற னர். ஊதிய அட்டவணையில் கடை கள், வர்த்தக நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் இந்த ஊழியர்களுக்கும் பொருந்தும். 1948ஆம் வருடத்திய குறைந்தபட்ச  ஊதிய சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், இவற்றை டாஸ்மாக் நிர் வாகம் மதிப்பதில்லை. இந்த 20  ஆண்டுகளில் தொகுப்பூதியமாக மாதாந்திர அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. தற்போது மேற் பார்வையாளர்களுக்கு ரூ.14 ஆயி ரத்து 850ம், விற்பனையாளர்க ளுக்கு ரூ.12 ஆயிரத்து 530ம், உதவி  விற்பனையாளர்களுக்கு ரூ.11  ஆயிரத்து 340 என்ற மட்டுமே ஊதிய மாகப் பெற்று வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணி நிரந்தர சட் டம் 1981ன் படி 480 நாட்கள் பணி  முடித்த தேதியிலிருந்து நிரந்தரம் செய்து அனைத்து பணிப்பயன் களையும் வழங்க வேண்டும். 20  ஆண்டுகளுக்கு மேலாகப் பணி யாற்றி வருபவர்களை பணி நிரந்த ரம் செய்யாமல் தற்காலிக ஊழி யர்களாகவே வைத்திருப்பது சட்டத் திற்குப் புறம்பானதாகும். எனவே பணி நிரந்தரம் செய்யப்பட வேண் டும் என்று ஊழியர்கள் தொடுத்த  வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் ஆஜ ராவதை உறுதி செய்திட வேண்டும். அத்துடன் தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்ப்பில் நிர்வாகம் மேல் முறையீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப மருத்துவத் திட்டம்  என்கிற பெயரில் சேம நல நிதி  பிடித்தம் செய்யப்படுகிறது. இத னால் எவ்வித பலனும் இல்லை. இதே டாஸ்மாக் நிறுவனத்தில் இள நிலை உதவியாளர்கள் உள்ளிட்ட  பணியாளர்களுக்கு அமலாக்கப்ப டும் தேசிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை கடை ஊழியர்களுக் கும் அமலாக்க வேண்டும். இஎஸ்ஐ திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் பணியிட மாறு தலுக்கு என்று கொள்கையை உருவாக்க வேண்டும். அதன் மூலம் சுழற்சி முறையில் குறிப் பிட்ட காலத்திற்கு ஒருமுறை நேரடி கலந்தாய்வின் மூலம் பணி யிட மாறுதலை செய்திட வேண்டும். கடை ஆய்வு செய்யப்படும் போதும் விருப்பு வெறுப்பின் அடிப்படை யில் குற்றச்சாட்டை சுமத்துகிறார் கள். நடவடிக்கைகள் என்பது பார பட்சமாகவே அமைகிறது. எனவே, குற்றச்சாட்டின் பேரில் குற்றப்பத்தி ரிக்கை வழங்குவது, விளக்கம் கேட் பது, உள்ளக விசாரணை நடத்து வது என்ற நடைமுறையைக் கடைப் பிடித்து நிரூபிக்கப்பட்ட குற்றங் களுக்கு மட்டுமே பாரபட்சமில்லா மல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுபான விற்பனையில் வளர்ச்சி வேண்டுமென இலக்கு தீர்மானிக் கக் கூடாது.  மதுவிலக்கு என்பது இரவு 10  மணி முதல் மறுநாள் பகல் 12 மணி  வரை அமலில் உள்ளது. ஆனால் மனமகிழ் மன்றம் என்ற FL2 பார் கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை என்று கூடுதல் நேரம்  செயல்படுகிறது. எனவே இதை  முறைப்படுத்த வேண்டும். மதுக் கடையின் மின்கட்டணத்தை டாஸ் மாக் நிர்வாகமே நேரடியாக செலுத் திட வேண்டும். சுகாதாரமான குடி நீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப் படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். உணவு இடைவேளை அளிக்க வேண்டும்.  அரசு ஊழியர் களைப் போல் கடை ஊழியர்களுக் கும் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்திட வேண் டும். தற்காலிக பணி நீக்கம் என்ற  பெயரில் பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் கொடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.