districts

img

ஊழியர் விரோதபோக்கு: சிஐடியு ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, அக்.24- அரசு போக்குவரத்து கழக பொள்ளாச்சி பணிமனை 2 இல் ஊழியர் விரோத போக்குடன் செயல்படும் போக்கு வரத்து கட்டுப்பாட்டாளரை கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோவை கோட்டம், பொள் ளாச்சி இரண்டாவது பணிமனையில் கட்டுபாட்டாளராக இருக்கும், ஆறுமுகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதில், ஊழியர்கள் விடுமுறை கேட்டால்  தர மாறுப்பதுடன், கூடுதல் நேர வேலைக்கு கிடைக்கும்  பணப்பயன்களில் லஞ்சம் கேட்பதாகவும், தன்னிடம் எல்ஐசி  பாலிசி எடுப்பவர்களுக்கு சலுகை வழங்குவதாகவும், இது குறித்து, பொள்ளாச்சி கிளை மேலாளரிடம் புகார் தெரி வித்தால் கண்டுகொள்வதில்லை என ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றவர்கள் குற்றம்சாட்டினர்.  முனனதாக, ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு கிளைச் செய லாளர் பொன்னுசாமி தலைமை ஏற்றார். இதில், கோவை கோட்ட பொதுச்செயலாளர் பரமசிவம் மற்றும் துணை பொதுச்செயலாளர் வி.கே.முருகேசன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.