districts

img

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாராத்தான்

கோவை, ஜூன் 26- சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை  மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திங்களன்று நடைபெற்றது.  சர்வதேச போதை ஒழிப்பு தினம் ஜூன் 26 ஆம் தேதி  கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதி களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு நிகழ்வாக கோவை மாநகர காவல் துறை சார்பில் விழிப் புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.  கோவை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் துவங்கிய இந்த மாரத்தான், மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக ரேஸ்கோர்ஸ் பகு தியை அடைந்து மீண்டும் காவலர் பயிற்சி பள்ளி மைதானத் தில் முடிவடைந்தது. இதனை கோவை மாநகர காவல் ஆணை யாளர் பாலகிருஷ்ணன், கேரள டிஐஜி அஜீத்தா பேகம், சதீஷ் பினோ ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில், மாரத்தான் போட்டியில் கோவை மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.