திருப்பூர், டிச.14- சமூக நல்லிணக்கத்தை பேணிக்காக்க, அன்பிலதனை அறம் இந்திய அளவில் நடை பெறும் கலைப் பயணம் வியாழனன்று திருப் பூர் வந்தடைந்தது. நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் முன் னேற அமைதியான சமூகச் சூழல், மற்றும் ஒற்றுமை நிலவ வேண்டும். சமூக நல்லிணக் கம் பேணப்பட வேண்டும். வெறுப்பை விலக்கி அன்பை விதைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு இந்திய மக்கள் நாடக மன் றத்தின் முன்னெடுப்பில் இந்திய அளவில் பல அமைப்புகள் ஒன்று கூடி கலைப்பயணம் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதி யாக வியாழனன்று திருப்பூர் புதிய பேருந்து நிலை யத்திற்கு இக்கலை குழு வந்தடைந்தது. அங்கு மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க் கால் குதிரை ஆட்டம், தப்பாட்டம் என்று பல் வேறு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து துவங்கிய கலை பேர ணியை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கா. செல்வராஜ், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்கு மார் ஆகியோர் துவக்கி வைத்தனர். கலைக் குழு பேரணி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி எம்.எஸ்.நகர் பகுதியில் நிறைவ டைந்தது. இதைத்தொடர்ந்து அங்கு நடை பெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட் சண்யா, திரைக் கலைஞர் ரோகினி ஆகி யோர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் த.க.இ.பெ.ம பொதுச் செயலாளர் மருத்துவர் அறம், நாடகச் செய லாளர் பிரளயன், ஒருங்கிணைப்பாளர் அனிதா பன்னீர்செல்வம், மாநகராட்சி துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே. கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.