districts

தொப்பூர் கோர விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

தருமபுரி, பிப்.5- தொப்பூர் கணவாய் பகுதியில் ஜன.24 ஆம் தேதியன்று ஏற்பட்ட சாலை விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்த தொப்பூர் கணவாய் அருகே கடந்த ஜன.24 ஆம் தேதியன்று, கர்நாடகாவிலி ருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இரட்டை பாலம் அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி மற்றும் 2 கார்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத் துக்குள்ளானது. இதில் லாரியும், காரும் தீப் பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் காருக் குள் இருந்த கோவையைச் சேர்ந்த மஞ்சு, விமல்குமார், இவரது மனைவி அனுஷ்கா, ஜெனிபர் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 3 குழந்தைகள் உள்பட 8க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் சிகிச்சை பெற்று வந்த விமல்குமாரின் 4 மாத பெண் குழந்தை கடந்த ஜன.31 ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனி டையே சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி ஓட்டுநரான பென்னாகரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் ஞாயிறன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தொப்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தொப்பூர் பகு தியில் ஏற்பட்டு வரும் தொடர் விபத்துகளை தடுக்க, ரூ.702 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒரு விபத்து: லாரி ஓட்டுநர் பலி

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர் (55). இவர் கிருஷ்ணகிரியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கேக் செய்ய பயன்படுத்தும் கிரீம் பாரத்தை கண்டெய்னர் மூலம் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றார். கண்டெய்னர் லாரி தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் லாரியில் இருந்த கண்டெய்னர் மட்டும் தனியாக சாலையோரம் கவிழ்ந்தது. இந்த இடுப்பாடுகளில் சிக்கி ஓட்டுநர் சிவசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து தகவலறிந்த தொப்பூர் காவல் துறையினர் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து குழுவினர், இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.