districts

பணப்பட்டுவாடா பாதிப்பதால் ஊடகத்தினரை ஒருமையில் பேசி விரட்டிய அண்ணாமலை

கோவை நாடாளுமன்ற தொகுதி யில் பாஜகவின் மாநிலத் தலை வர் அண்ணாமலை போட்டியிடுகிறார். தோல்வி பயத்தால் மற்ற தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்யச் செல்லாமல் கோவை நாடாளுமன்ற தொகுதியிலேயே முடங்கி யுள்ளார். அண்ணாமலையின் தேர்தல் பிரச்சாரத்தை காண மக்கள் கூட்டம் எது வும் வரவில்லை. இருப்பினும், அவரது தேர்தல் பிரச்சாரத்தை சமூக வலைதள பக்கங்களில் ஐடி விங் மூலம் நேரலை செய்து வருகின்றனர்.  எனினும் அண்ணாமலை போகிற இடங் களில் எல்லாம் ஏதோ ஒன்றை உளறிக் கொண்டிருப்பதால், அது ஊடகத்திற்கு தீணியாக உள்ளதால், தேர்தல் பிரச்சா ரங்களை ஒளிபரப்ப முன்னணி காட்சி ஊட கங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் உடன் சென்று செய்தி சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று பல்லடம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச் சாரம் மேற்கொண்டார். அப்போது முன் னணி காட்சி ஊடகத்தைச் சேர்ந்த செய்தி யாளர்கள் அண்ணாமலையுடன் சென்று செய்தி சேகரித்தனர்.  அப்போது அண்ணாமலையின் ஐடி  விங்கை சேர்ந்தவர்கள் உங்களுக்குத் தான் நேரலை லிங்க் கொடுக்கிறோமே ஏன் உடன் வந்து தொல்லை செய்கிறீர்கள் என  செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை கவனித்த அண்ணா மலை பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வந்து செய்தியாளர்கள் குழு வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  அப் போது பத்திரிகையாளர்கள் தொடர்ந்து உடன் வந்து தொந்தரவு செய்தால் எப்படி மக்களை சந்தித்து குறைகளை கேட்பது, ஏன் கேமராவை தூக்கிக் கொண்டு வருகி றீர்கள், போலீசில் புகார் கொடுப்பேன் என ஏகவசனத்திற்கு பேசினார். இதுகுறித்து பின்தொடர்ந்த ஊடக வியலாளர்களிடம் கேட்கையில், பொது வாக அண்ணாமலை ஊடகம் பின்னால் வருவதற்குத்தான் ஆசைப்படுவார். வர வில்லை என்றால் உடனே எங்கள் அலுவ லகத்திற்கு செல்போனில் அழைத்து கோபித்துக்கொள்வார். எங்கள் அலுவல கமும் உடனே சென்று கவர் செய்யுங்கள்  என்பார்கள். இப்போது இவர் கோபித்துக் கொள்வதற்கு காரணமாக நாங்கள் பார்ப்பது, தேர்தல் கடைசிநேர பரபரப்பில் தான் பணப்பட்டுவாடா நடக்கும். ஆகவே நாங்கள் பின்தொடர்ந்தால் இவர்களின் பணப்பட்டுவாடாவிற்கு பிரச்சனை வரும் என்பதால் எங்களை விரட்டுவதிலேயே குறியாக இருக்கிறார் அண்ணாமலை என்றே பார்க்க வேண்டியுள்ளது. ஒரு நாளைக்கு பத்துத்தடவையும் அசராமல் பேட்டி கொடுக்கும் அண்ணாமலை இப் போது எங்களை விரட்ட இதைவிட வேறு  எந்த காரணமும் இருக்க முடியாது என கொந்தளித்தனர்.  இதனிடைய. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாட செய்வதற்காக கொண்டு வந்த கோடிக்கணக்கான ரூபாய் நெல்லையில் பறக்கும்படையினரிடம் சிக்கிய நிலை யில், அது நெல்லை பாஜக வேட்பாளர் நயி னார் நாகேந்திரன் உறவினர் என்பதும், மற்றொருவர் பாஜக நிர்வாகி என்பதும்  உறுதியாகி உள்ளது. எனவே எச்சரிக்கை  உணர்வோடு, ஒரு பைசா கூட செலவு செய்ய மாட்டேன் என வாய்ச்சவடால் விட்ட  அண்ணாமலை அம்பலப்பட்டு போய்விட் டால் என்ன செய்வது என்பதற்காகவே ஊட கத்தினரை ஒருமையில் பேசியுள்ளார் என் பதே அரசியல் விமர்சர்களின் கருத்தாக உள்ளது.  தற்போது, அண்ணாமலை ஊடகத்தி னரை மிரட்டும் செல்போன் வீடியோ காட்சி கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதே போல பலமுறை செய்தியாளர்களை அண் ணாமலை ஒருமையில் பேசி வாக்குவாதத் தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.