districts

img

அண்ணாமலை ஒரு கோமாளி: அமைச்சர் கிண்டல்

கோவை, ஜன.16- என்னவென்றே தெரியாமல், யாரோ எழுதிக்கொடுத்ததை படித்துவிட்டு போகும்  அண்ணாமலை ஒரு கோமாளி என சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் சாடி னார். தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் 8 ஆவது சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்று வரு கிறது.  இதில் அமெரிக்கா, கனடா உட்பட எட்டு நாடுகளைச் சேர்ந்த 13 பலூன்கள் பறக்க விடப் பட்டன.  இதைப்பார்வையிட வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அங்கி ருந்த ஹெலிகாப்டரில் ஏறி ஆய்வு மேற் கொண்டார். இதன்பின் பலூன்களை இயக் கும் பைலட்டுகளுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். இதில், சுற்றுலா பண்பாட்டுத் துறை முதன்மை செயலாளர் பி.சந்திரமோ கன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், கு.சண்முகசுந்தரம் எம்.பி., தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை  இயக்குநர் சந்தீப் நந்தூரி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாரா யணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களி டம் அமைச்சர் கா.ராமச்ந்திரன் பேசுகையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் மூன்றாவது இடத்தில் உள்ளது, கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விரைவில் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட உள்ளது, என்றார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் கோவை ஈஷா மையத்தில் சுபஸ்ரீ இருந்த சம்பவத்தில் காவல் துறையி னரை என்னிடம் ஒப்படைத்தால் ஒரு வாரத் தில் தீர்வு ஏற்படும் என கூறியிருந்தது குறித்து கேட்டபோது, அண்ணாமலை ஒரு கோமாளி, ஊட்டிக்கு வந்த பொழுது தேயிலைத் தோட்ட  தொழிலாளர்கள் பிரச்சனைகள் என்ன வென்று தெரியாமல்  எழுதிக் கொடுத்ததை  படித்துவிட்டு சென்றவர், என்றார்.