districts

img

கால்நடை பராமரிப்பு உதவி பணியாளர் நேர்காணல்

கோவை,  பிப்.27 –  

கோவையில் கால்நடை பராமரிப்பு உதவிப் பணியாளர் நேர்காணல் முன்னறி விப்பின்றி ரத்து செய்யப்பட்டதைக் கண் டித்து 350-க்கும் மேற்பட்ட விண்ணப் பதாரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை டாடாபாத் கணினி சேவை மையத்தில் கால்நடை பராமரிப்பு உதவிப்  பணியாளர்கள் பணிக்கான நேர்காணல் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் சனியன்று தீடீரென எவ்வித முன்னறி விப்பின்றி நேர்காணல் ரத்து செய்யப்பட் டதால் ஆவேசமடைந்த விண்ணப்ப தாரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகை யில், கடந்த 4 ஆண்டுகளாக நேர்காணலுக் கான அழைப்பு விடுத்து அதன்பிறகு கார ணமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் நேர் காணல் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்த  வருடமும் எந்த தெளிவான காரணமும் கூறப் படாமல் நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள் ளதாக வேதனை தெரிவித்தனர்.

;