கோவை, பிப்.19- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், போதை பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்பு ணர்வு நாடகம் சூலூரில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், தமிழ்நாடு முழு வதும் போதைக்கு எதிரான ஒரு கோடி பேரிடம் கையெ ழுத்து பெறும் இயக்கம், கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக, வாலிபர் சங்க சூலூர் தாலுகாக்குழு சார்பில் பேருந்து நிலை யம் அருகே நடைபெற்றது. இதில், சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார், மாவட்ட துணைத்தலை வர் மணிபாரதி, சூலூர் தாலுகா தலைவர் ரவிதாஸ், சூலூர் தாலுகா செயலாளர் தீனதயாளன், சூலூர் 7 ஆவது வார்டு உறுப்பினர் வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அப் போது, போதை பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இது அப் பகுதி பொதுமக்களை வெகுவாக ஈர்த்தது.