சேலம், மார்ச் 19- சேலத்திற்கு வந்த தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பிரதமர் மோடிக்கு, கருப்புக்கொடி காட்டிய ‘இந்தியா’ கூட்டணி கட்சி யினரை காவல் துறையினர் கைது செய்தனர். தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து நிதியை வழங்காமல் இருப் பது, குறிப்பாக புயல் பாதித்த பொழுது தமிழ்நாட்டிற்கு முறை யாக நிவாரண நிதி வழங்காத பிரதமர் மோடியின் சேலம் வருகையை கண்டித்து, ‘இந்தியா’ கூட்டணி சார்பில் கருப்பு கொடி ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எ.மோகன் தலைமையில், கொண் டலாம்பட்டி பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில், இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், திராவிடர் விடுதலைக் கழ கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு கைதாகினர். இதேபோல், சேலம் கோட்டை மைதானத்தில் கருப்புக்கொடி ஆப்பாட்டம் நடைபெற்றது. விசிக சேலம் வடக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் காஜா மைதீன் தலை மையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் மூசா உட்பட பலர் கலந்து கொண்டு, மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறை யினர் கைது செய்தனர்.