districts

img

தொழிலாளர் விரோத பாஜக அரசைக் கண்டித்து இராமநாதபுரத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் பிரச்சாரம்

இராமநாதபுரம், ஜூலை 15- ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட் டங்களை ரத்து செய்ய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் ஓய்வூதியத்தை இபிஎப் மாதம் ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐ டியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக இராமநாதபுரத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பாரதிநகரில் துவங்கிய பிரச்சார இயக்கத்திற்கு சிஐ டியு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சந்தானம் தலைமை தாங்கினார். துவக்கி வைத்து சிஐடியு மாவட்ட  செயலாளர் எம்.சிவாஜி பேசி னார். பழைய பேருந்து நிலை யம், புதிய பேருந்து நிலை யம், அரண்மனை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடை பெற்றது. இதில் ஏஐடியுசி மாவட்ட  செயலாளர் என்.கே ராஜன்,  சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் ஆர்.குருவேல், ஆர். வாசுதேவன், எம். மலை ராஜன், எஸ்.வெங்கடசுப்பிர மணியன், பி.பால்ராஜ், கே.  ராகுல் உள்பட பலர் பங்கேற்  றனர்.