districts

img

“அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நிதியம்”

தருமபுரி, செப்.24- அமைப்புசாரா தொழிலாளர்க ளுக்கு சமூக பாதுகாப்பு நிதியம்  உருவாக்க வேண்டும் என வலியு றுத்தி அனைத்து தொழிற்சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வை கட்டுப்ப டுத்த வேண்டும். ரேசன் முறையை  பலப்படுத்த வேண்டும். அனைவ ருக்கும் குறைந்தபட்ச மாத ஊதிய மாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண் டும். நிரந்தரத் தன்மையுள்ள பணி களில் ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது. பெட்ரோல்,  டீசல், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்திருத்தம், மின்சார விநியோக சட்டத் திருத் தங்களை கைவிட வேண்டும். சம  வேலைக்கு சம ஊதிய சட்டத்தை  அமல்படுத்த வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியா ருக்கு தாரைவார்க்கக்கூடாது. படித்த இளைஞர்களுக்கு தகுதிக் கேற்ற வேலையை உருவாக்க வேண்டும். அமைப்புசாரா தொழி லாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நிதியம் உருவாக்க வேண்டும். சத் துணவு, அங்கன்வாடி, ஆஷா பணி யாளர்களை தொழிலாளர்களாக அங் கீகரிக்க வேண்டும். கூட்டுப்பேர உரி மையை உறுதிசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, செவ்வாயன்று அனைத்து தொழிற்சங்கத்தினர் மாநிலம் தழு விய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஏஐடியுசி மாவட்டச் செயலா ளர் கே.மணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி. ஜீவா, துணைத்தலைவர் சி.முரளி, எல்பிஎப் மாவட்டத் தலைவர் அன்பு மணி, செயலாளர் சண்முகராஜா,  மாநிலக்குழு உறுப்பினர் ஜே.பழனி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் சிவ லிங்கம், ஏஐடியுசி மாவட்டத் தலை வர் எம்.மாதேஸ்வரன், ஏஐசிசி டியு மாவட்டச் செயலாளர் சி.முரு கன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்பு பேட்ச் அணிந்தும், கருப்புக் கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் அசோகன் தலைமை வகித்தார். ஏஐ டியுசி நிர்வாகி ஜெயராமன், ஏஐ சிசிடியு நிர்வாகி வெங்கடேசன், சிஐ டியு நிர்வாகிகள் சு.சுரேஷ், வரத ராஜன், எல்பிஎப் நிர்வாகி சரவ ணன், எம்எல்எப் வை.பாலு ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இதில், எல்பிஎப் மாவட்ட கவுன்சில் செயலாளர் பழனியப்பன், சிஐடியு  மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி,  ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலா ளர் தனசேகரன், எல்டியூசி மாவட் டச் செயலாளர் புகழேந்தி உட்பட  ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.