districts

img

சாதி ஆணவப்படுகொலையை தடுக்க தனிச் சட்டம்! அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல்

தருமபுரி, ஜன.28- சாதி ஆணவப்படுகொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும், என அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றம் வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் தமிழ்நாடு மாநில 18 ஆவது மாநாடு, தருமபுரியில் ஜன.26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஜன.26 ஆம் தேதியன்று பேரணி, பொதுக்கூட்டமும், ஜன.27, 28 ஆகிய தேதிகளில் தருமபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் பிரதிநிதிகள் மாநாடும் நடைபெற்றது. முன்னாள் மாநிலச் செயலாளர் வ.பாலமுருகன் கொடியேற்றி வைத்தார். மாநில துணைத்தலைவர் துரை.அருள்ராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தேசிய பொதுச்செயலாளர் இரா.திரு மலை மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன், இளைஞர் பெருமன் றத்தின் கேரளா மாநிலச் செயலாளர் ஜிஸ்மோன், தேசியச் செயலாளர் கே.லெனின் பாபு, கர்நாடகா மாநிலச் செயலாளர் ஹரிஸ்பாலா, புதுச்சேரி மாநிலச் செயலாளர் எழிலன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செய லாளர் க.பாரதி, பொருளாளர் உ. சிவாஜி ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். இம்மாநாட்டில், பட்டதாரி இளை ஞர்களுக்கு வேலை கிடைக்க நாடாளு மன்றததில் வேலை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரசு மற்றும் ஆசிரியர் காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். பெண் கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலி யல் வன்முறைகளை தடுக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவ ராக இரா.தமிழ் பெருமாள், செயலா ளராக க.பாரதி, பொருளாளராக எம். காரல் மார்க்ஸ் மற்றும் 5 துணைத் தலைவர்கள், 5 துணைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் க.சந்தானம் நிறைவு ரையாற்றினார். வரவேற்புக்குழு பொரு ளாளர் எஸ்.தேவராசன் நன்றி கூறி னார்.