districts

img

தியாகிகள் நினைவுச் சுடர் பயணக்குழுவுக்கு எழுச்சிகர வரவேற்பு

திருப்பூர், டிச. 10 - அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் 35 ஆவது மாநாடு திருச்சூரில் டிசம்பர் 13 முதல் 16 ஆம் தேதி வரை   நடைபெறுவதையொட்டி தெலுங் கானா, வெண்மணி, சேலம் சிறை தியாகி கள் நினைவாக எடுத்துச் செல்லப்படும்  சுடர் பயணத்திற்கு சனிக்கிழமை காலை  திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளியன்று மாலை திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளிக்கு வந்த தியாகிகள் சுடர் பயணக்குழுவினருக்கு எழுச்சிமிகு வரவேற்பும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை இப் பயணக் குழுவினருக்கு திருப்பூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர், அவி நாசி பைபாஸ், மங்கலம், இடுவாய், பல்லடம் ஆகிய மையங்களில் சிறப் பான வரவேற்பு அளிக்கப்பட்டு வழி யனுப்பி வைக்கப்பட்டது.  

முன்னதாக, பெருமாநல்லூர் மின் கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்ட  விவசாய தியாகிகள் நினைவிடத்திலும், சீராணம்பாளையத்தில் தியாகி பழனிச் சாமி நினைவிடத்திலும், இடுவாய்  தியாகி கே.ரத்தினசாமி நினைவிடத் திலும் பயணக்குழு தலைவர்கள் மலர்  அஞ்சலி செலுத்தினர். பெருமாநல்லூரில் வடக்கு ஒன்றிய  செயலாளர் எஸ்.‌அப்புசாமி, அவி நாசியில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம், இடுவாயில் கிளைச் செயலாளர் கே.கருப்புசாமி மற்றும் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன், பல்லடத்தில் மாவட்ட துணைச் செயலாளர் வை. பழனிச்சாமி ஆகியோர் தலைமை வகித் தனர். விவசாய சங்க நிதிச் செயலாளர் கிருஷ்ணபிரசாத், இணைச் செய லாளர் விஜூ கிருஷ்ணன், துணை  தலைவர் எஸ்.கே.பிரிஜா, தெலுங் கானா மாநில செயலாளர் சாகர், கேர்ள  மாநில தலைவர் பிரகாசம் மாஸ்டர்,  விவசாயிகள் சங்க மாநில பொரு ளாளர் கே.பி‌.பெருமாள், மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு, மாநில  துணைத் தலைவர் எஸ்.துரைராஜ், மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன், மாவட்ட செயலாளர் ஆர். குமார் ஆகியோர் சிறப்புரை ஆற் றினர். மங்கலத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.மூர்த்தி தலைமையில் மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்ட துணை தலைவரும் அவிநாசி  ஒன்றிய கவுன்சிலருமான பி.முத்துசாமி  உள்ளிட்டோர் துண்டு அணிவித்து வாழ்த்தினர். இந்நிகழ்வில், திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். 

கோவை

இதேபோன்று, சனியன்று மதியம்  தியாகிகள் ஜோதி கோவை மாவட்டம் சூலூரை வந்தடைந்தது. சூலூர் பேருந்து நிறுத்தத்தில் மாபெரும்  வர வேற்பு வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் செய லாளர் ஜே.ரவீந்திரன் தலைமை  தாங்கினார். மாவட்ட செயலாளர்  வி.ஆர்.பழனிச்சாமி வரவேற்புரை யாற்றினார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.துரைராஜ் மாநாட்டின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினார். தியாகிகள் ஜோதிப்பயணத்திற்கு தலைமையேற்று வரும் சங்கத்தின்  அகில இந்திய இணைச்செயலாளர் விஜீ கிருஷ்ணன், அகில இந்திய துணைத்தலைவர் எஸ்.கே. பிரிஜா ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.  இதனைத்தொடர்ந்து மலுமிச்சம் பட்டியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ் விற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன் தலைமை தாங்கினார். முன்னதாக,  ஜோதிபயணத்தில் வந்த  தலைவர்கள் அனைவருக்கும் கதர்  ஆடை அணிவித்து கௌரவிக்கப் பட்டனர். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன், தமிழ்நாடு விவாசய சங்க  மாவட்ட பொருளாளர் கே.தங்கவேல், காளப்பன், என்.ஆறுச்சாமி மற்றும்  சிஐடியு மாவட்ட தலைவர் கே. மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கேரள மாநில எல்லைவரை தியாகி கள் ஜோதி குழுவை அனுப்பிவைத் தனர்.

மோடி, அமித்சா இரட்டை இன்ஜினை விரட்டியடிப்போம்

முன்னதாக, வெள்ளியன்று ஈரோட் டில் நடைபெற்ற தியாகிகள் ஜோதி பயணத்தின் பொதுக்கூட்டத்தில் விஜு கிருஷ்ணன் பேசுகையில்,  தோழர் என்.சங்கரய்யா விவசாயி கள் சங்கத்தின் அகில இந்திய தலை வர்களில் ஒருவராக இருந்தவர். 1968ல்  கீழ் வெண்மணியில் விவசாய தொழிலா ளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது  அன்று தனது சிம்மக் குரலில் நியா யத்திற்காக எப்படி பேசினாரோ அதே போல இன்றைக்கும் தனது 101 வயதிலே பேசி அத்தியாகிகளின் நினைவு சுடர் பயணத்தைத் தொடங்கி வைத்துள்ளார். விவசாயிகளும், விவ சாய தொழிலாளர்களும், தொழிலாளர் களும் வர்க்க ஒற்றுமையோடு மிகப் பெரிய போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என்று சிம்மக்குரலில் பேசி  தொடங்கி வைத்தார். வரும் காலத்தில்  மக்கள் நலன் காக்கும் ஒரு மாற்றுக் கொள்கையுடைய அரசாங்கம் வேண்டும் என்றார்.  2014ல் ஆட்சிக்கு வந்த நரேந்திர  மோடி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம். சாமிநாதன் கமிசன் சொன்னதுபோல உற்பத்தி  செலவிற்கு மேல் 50 சதம் கூடுதலாக  விளைப் பொருள்களுக்கு ஆதார  விலை கொடுப்போம், குறைந்த வட்டிக்கு கடன் கொடுப்போம். விவ சாய பயிர்கள் நாசமானால் காப்பீடு செய்து தருவோம்.  எல்லா விவசாய  தொழிலாளிகளுக்கும் 100 நாள் வேலையை 200 நாட்களாக அதிக ரித்து கொடுப்போம். அதிக கூலி கொடுப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு  வந்தது. ஆனால் 8 வருடத்தில் 1 லட்சத்து 12ஆயிரம் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் கடுமை யான நெருக்கடிக்கு ஆளாகி தற் கொலை செய்து கொண்டனர். இதே 8 வருடத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அப்படி என்றால் சுமார் 4 லட்சம் விவசாயிகள், விவசாய தொழி லாளர்கள், தொழிலாளர்கள் தற் கொலை செய்து கொண்டனர். அவ் வளவு கொடுமையான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 

இவர்களுக்கு எதிராக கார்ப்பரேட்டு களின் கொள்ளைக்காக விவசாயி களின் உரிமைகளைப் பறித்து 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தனர். ஆனால் விவசாயிகள், தொழி லாளர்களும் ஒன்றுபட்டு மிகப்பெரிய போராட்டம் நடந்தது. டெல்லியை நோக்கிச் செல்லும் சாலைகளை முற்று கையிட்டு வெயில், மழை, குளிர், கொடும் காற்றிலும் போராட்டம் நடை பெற்றது. இதை எதிர்த்து மோடியின் பாஜக அரசாங்கம் சாலைகளில் பள்ளம்  தோண்டி போராட்டத்தை தடுக்க முயற் சித்தது. தடுப்புகளை ஏற்படுத்தியது. லத்தி சார்ஜ் நடத்தி விவசாயிகளை வீட்டிற்கு அனுப்பி விடலாம் என்று நினைத்தது. ஆனால் விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒரே குரலில் சொன்னது 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் போராட்டம் ஓயாது என்று போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் அடிபட்டு உயிரிழந்த தியாகிகள் சொன்னது, எனக்கு பட்ட  ஒவ்வொரு அடியும் மோடி அரசாங் கத்தின் சவப்பெட்டிக்கு அடிக்கப் பட்ட அடியாகும் என்றனர். இவ்வாறு  அச்சமின்றி போராடிய விவசாயி களுக்கு வெற்றி கிடைத்தது.  இலங்கையில் இதுபோல போராட் டம் நடைபெற்றது. ஆட்சியாளர்கள் (ராஜபக்சே சகோதரர்கள்) வெளிநாடு களுக்குத் தப்பிச் செல்ல நேரிட்டது. அதுபோ இங்கேயும் தோழர் என்.சங்கரய்யா சொன்னது போல டெல்லி யில் விவசாயிகள், விவசாய தொழி லாளர்கள், தொழிலாளர்களின் போராட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் எல்லா மாநிலங்களிலும் நடக்கும். இலங்கை ஆட்சியாளர்கள் ஓடியது போல 2024ல் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் ஓடும் வகையில் வலிமையான போராட்டம் அமையும் என்றார்.