திருப்பூர், ஏப். 11 – ஆட்டோ ஓட்டுநர்கள், உரி மையாளர்களைக் குறி வைத்து வலுக்கட்டாயமாக அபராதம் விதிப்பது, வழக்குப் போடுவது என்று திருப்பூர் மாநகர காவல் துறையினர் செயல்படுவதாக எதிர்ப்புத் தெரிவித்து ஏஐடியுசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கத் தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செவ்வாயன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்க தலை வர் வி.எஸ்.சசிகுமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கே.சுரேஷ் முன்னிலை யில் மாவட்டப் பொதுச் செயலாளர் பி.ஆர். நடராஜன் உள்ளிட்டோர் கண்டன உரையாற் றினர். இதில் ஏஐடியுசி அகிலஇந்தியத் துணைத் தலைவர் கே.சுப்பராயன் எம்.பி. கலந்து கொண்டு, அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையில் காவல் துறையினர் செயல்படுவதை ஒழுங்குபடுத்த வேண்டும், இல்லாவிட்டால் காவல் நிலையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற் படும் என்று கூறினார். இதில் தொழிலா ளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.