districts

img

பாஜக பற்றி வாய் திறக்காமல் போராட்டம்: அவிநாசி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய அதிமுகவினர்

அவிநாசி, பிப்.9- அவிநாசியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நீலகிரி தொகுதி எம்பி  ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட் டம் நடத்துவதாக கூறி ஆட்களைத்  திரட்டினர். ஆனால் இப்போராட் டத்தில் தமிழ்நாட்டின் அடிப்படை  பிரச்சனைகளையோ, தமிழ்நாட் டுக்குப் பாதகம் செய்யும் பாஜகவை  பற்றியோ யாரும் வாய் திறக்கவில் லை. அத்துடன் பலத்தைக் காட்டுகி றோம் என்ற பேரில் அவிநாசி வியாபா ரிகள், வர்த்தகர்கள் மற்றும்  பொது மக்களுக்கும் பெரும் இன்னலை ஏற் படுத்தினர். அவிநாசி  ஸ்டேட் பேங்க் வீதியில்  குலாலர் கல்யாண மண்டபம் அருகே  சாலையை மறித்து மேடை அமைப் கப்பட்டது. இதனால், காலை 8 மணி  முதல் போக்குவரத்து பாதிக்கப்பட் டது. இந்த வீதியில் உள்ள ஸ்டேட்  பாங்க் கிளையில் சேவை பாதிக்கப் பட்டு, பண பரிவர்த்தனை செய்ய முடி யாமல் நண்பகல் 12 மணி வரை  வாடிக்கையாளர்கள் அவதிப்பட்ட னர். மேலும், ஸ்டேட் பேங்க் வீதியில்  காலை 8 மணி முதல் மதியம் 12 மணி  வரை துணிக்கடை, பாத்திர கடைகள்,  பூக்கடை ஸ்பேர் பார்ட்ஸ் கடை,  எலக்ட்ரிக் கடைகளில் பொதுமக்கள்  பொருட்கள் வாங்க முடியவில்லை.  வேறு வழி இன்றி வியாபாரிகள் கடை களை அடைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. காவல்துறையினர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில்  கும்பாபிஷேகத்திற்கு வாகனங் களை நிறுத்த தேர்வு செய்த இடத்தில்  வாகனங்களை நிறுத்த வைக்க முயற்சி செய்தனர். இதற்கிடையில் மேடையின் பின்புறமாக அதிமுக வின் படம் பொருத்திய காரில் விஐபி  எஸ்காட் என்று வெறும் பிரிண்ட் அவுட் ஒட்டிய காரை நடுரோட்டில் நிறுத்தி காவலர்களுடன் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.  ஏற்கனவே, தை அமாவாசை  வெள்ளிக்கிழமை நாள் பொதுமக்க ளுக்கும், வியாபாரிகளுக்கும் இடை யூறு ஏற்படுத்தாமல் வேறு இடத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளு மாறு காவல்துறையினர் அதிமுகவி னரிடம் வியாழக்கிழமை கேட்டுக் கொண்டனர். அதற்கு மறுப்பு தெரி வித்து அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது பொதுமக்கள் மற்றும்  வியாபாரிகள் மத்தியில் முகச்சு ழிப்பை ஏற்படுத்தியது.   இந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி  பழனிச்சாமி பேசுகையில், திமுக, உத யநிதி ஸ்டாலின், ராசா போன்றோர் களை வசைபாடுவதில் மும்மரமாக  இருந்தார். எந்த இடத்திலும் ஒன்றிய  பாஜக அரசை விமர்சிக்கவில்லை. மேலும், ஒன்றிய அரசின் வரி சுமை யால் அவிநாசி, திருப்பூர், நியூ திருப் பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  பனியன் தொழில் சார்ந்த நிறுவ னங்கள் சந்தித்து வரும் இன்னல்கள்  குறித்தும் பேசாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பாஜகவுடன் கூட்டணி  இல்லை என்று கூறினாலும், பாஜக வின் அடிப்படை செயல்பாட்டை விமர்சனம் செய்யாதது சந்தேகத்தை  ஏற்படுத்துவதாக உள்ளது.