districts

img

சேலம்: நில மோசடி தொடர்பாக அதிமுக நிர்வாகி கைது

சேலம், மார்ச் 21- நில மோசடி தொடர்பாக சேலம் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஏ.இ.சுகு மாரை காவல் துறையினர் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் துர்கா  சங்கர் தாக்கட். இவர் கடந்த 1993 ஆம் ஆண்டு ஏற் காட்டில் 1.04 ஏக்கர் நிலத்தை சேலம் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற  இணைச் செயலாளர் சுகுமார் மூலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்தை தங் கள் குடும்பத்திலுள்ள ஐந்து நபர் கள் மீது துர்கா சங்கர் தாக்கட் கிரை யம் செய்துவிட்டு, மீண்டும் மத்திய பிரதேசம் சென்றுவிட்டார். அவ்வப் போது சேலம் வரும் துர்கா  சங்கர் தாக்கட், ஏற்காட்டில் சென்று நிலத்தை பார்வையிட்டு வந்துள் ளார். இந்நிலையில், கடந்த 2  ஆண்டுகள் முன்பு அந்த நிலத்தை விற்று தரும்படி, சண்முக சுந்த ரம் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். இதையடுத்து துர்கா  சங்கர், அந்த நிலத்தை விற்ப னைக்காக காட்டியபோது தான், இந்த நிலம் போலியாக பத்திரப்ப திவு செய்து விற்பனை செய்யப்பட் டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக துர்கா சங்கர் தாக்கட், சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு புகார் அளித்திருந் தார். ஆனால் அப்போதிருந்த அதி முக ஆட்சி நெருக்கடி காரணமாக மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க  முடியாமல் இருந்தனர். இந்நிலை யில், துர்கா  சங்கர் தாக்கட் முதல மைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் கடி தம் ஒன்றை அனுப்பி வைத்தார். அதன் மீது தற்போது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சேலம் சீலநாயக்கன் பட்டி பகுதியைச் சேர்ந்த ஏ.இ.சுகு மார், கடந்த 1994 ஆம் ஆண்டு போலி யான ஆவணங்கள் தயார் செய்து, சேலம் செவ்வாய்பேட்டை பகுதி யைச் சேர்ந்த ஜானகிராமன் பால் ராஜ், என்.பி.சங்கர், கே.ஆர்.ரமேஷ் ஆகியோர் பெயரில் கிரையம் செய்து விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைய டுத்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், போலி ஆவணங்கள் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் மதிப் பிலான சொத்தை விற்பனை செய்த புகாரின் அடிப்படையில், அதிமுக நிர்வாகி சுகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.