சேலம், பிப்.19- சேலத்தில் வாக்காளர்களை வேண்டுமென்றே அலைகழித்து அவர்களை வாக்களிக்க விடாமல் திருப்பி அனுப்பிய அதிமுக முகவர் வெளியேற்றப்பட்டார். சேலம் கன்னங்குறிச்சி பேரூராட் சியிலுள்ள அரசு ஆரம்பப் பள்ளி யில் சனியன்று வார்டு உறுப்பினர் களுக்கான தேர்தல் நடைபெற்றது. இங்கு அமைக்கப்பட்டிருந்த ஒன்ப தாவது வார்டு வாக்குச் சாவடியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மட் டும் வாக்குப்பதிவு வெகு மந்தமாக நடைபெற்று வந்தது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த வாக்காளர் கள் ஆவேசமடைந்து அதிகாரிகளி டம் கேள்வி எழுப்பினர். அப்போது, அந்த வாக்குச்சா வடி மையத்தில் அதிமுக வேட்பாள ரின் முகவராக அமர்த்தப்பட்டிருந் தவர், வாக்காளர் அட்டையில் புகைப்படம் சரியில்லை, வேறு அடையாள அட்டையை எடுத்து வரக்கூறி பலரையும் திருப்பி அனுப் பியதால் வாக்குப்பதிவு தாமதமாகி வருவதாக தெரிவித்தனர். இத னால் நீண்ட வரிசையில் நின்று கடும் அதிருப்தியடைந்த வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவா தத்்தில் ஈடுபட்டனர். மேலும், தேர்தலை சீர்குலைக்க வும், திமுகவிற்கு ஆதரவான வாக்காளர்களை வேண்டுமென்றே திருப்பி அனுப்பி அவர்களின் வாக்கை திசை திருப்பதற்காக அத்தகைய செயல்களில் அதிமுக முகவர் ஈடுபட்டதாக கூறி திமுக -வினர் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஒன்பதாவது வார்டு அதிமுக வேட்பாளரின் முகவர் மாற்றப்பட்டார். அதன் பின்பு விறு விறுப்பாக தேர்தல் நடைபெற்றது. பாஜக வேட்பாளர் வெளியேற்றம் இதேபோல் சேலம் மாநகராட்சி 56 வது வார்டில் பாஜக சார்பில் போட் டியிடும் செல்வராஜ் என்பவர் நீண்ட நேரம் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து கொண்டு வாக்களிக்க வரும் வாக்காளர்களிடம் சைகை காட்டி வாக்கு சேகரிப்்பில் ஈடுபட் டார். இதனைத்தொடர்ந்து அங்கி ருந்த தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் அவரை வெளியே அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.