திருப்பூர், ஜூலை 22 - அவிநாசி தாலுகா சேவூர் வட்டாரத்தில் பருத்தி பயிர் செய்யப்பட்டதில் பெரும் நஷ் டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண் அதிகாரிகள் நேரில் கள ஆய்வு செய்து நஷ்டத்தை தவிர்க்க ஆலோசனை வழங்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம் கேட்டுக் கொண்டுள்ளார். திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற குறை தீர் கூட்டத்தில் எஸ்.வெங்கடாசலம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: அவிநாசி தாலுகா சேவூர் வட்டாரத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். கொள்முதல் விலை கூடுதலாக கிடைக்கும் என்ற எதிர் பார்ப்புடன் கடந்த நான்கு மாதத்தில் பருத்தி விதை நடவு செய்தனர். இது தற்போது பிஞ்சு வைக்கும் தருணத்தில் விதைகளின் தரம் குறித்து வேளாண் துறை அலுவலர்கள் விவ சாயிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங் காமல் தனியார் கடைகளில் அவர்கள் தரும் விதைகளை வாங்கி பயன்படுத்தினர்.
தற் போது பிஞ்சுகள் ஒட்டாமல் உதிர்வதும், இருக்கும் காய்களும் மிகச் சிறிய அளவில் வெடிப்புத் திறன் குறைவாகவும், மகசூலில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுத்தும் நிலை ஏற் பட்டுள்ளது. எனவே வேளாண் துறை அலுவலர்களை சாகுபடி நிலங்களில் உள்ள பருத்திச் செடியை நேரில் பார்வையிட்டு உரிய ஆலோ சனை வழங்கி விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக் கும்படி கூறியுள்ளார். அத்துடன் அவிநாசி தாலுகா தத்தனூர் ஊராட்சியிலும், வேட்டுவபாளையம் ஊராட் சியிலும் குறிப்பிட்ட குட்டைகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதி விவசாயிகளுக்கு விரிவான தகவல் சென்று சேர, கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் விளம்பரப்ப டுத்தும்படியும் எஸ்.வெங்கடாசலம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.