கோவை, மே 24– பாரதியார் பல்கலைக் கழகத் திற்கு நிலம் கொடுத்த விவசாயி களை பாதுகாக்க கோவை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளிடம் உறுதிய ளித்தபடி, மேல்முறையீடு செய்த வழக்கை திரும்பப் பெற்று பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப் பீடு தர வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் கோவை தொண்டாமுத்தூர் ஒன்றிய மூன்றாவது மாநாடு செவ் வாயன்று ஆலாந்துறையில் நடை பெற்றது. ஒன்றிய தலைவர் கே.வி. ரங்கசாமி தலைமையில் நடை பெற்ற இம்மாநாட்டை மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன் துவக்கி வைத்தார். ஒன்றிய செயலா ளர் காளப்பன், பொருளாளர் கே. ராமசாமி ஆகியோர் அறிக்கையை முன்வைத்தனர். சிபிஎம் தொண்டா முத்தூர் ஒன்றிய செயலாளர் வி. மணி, விவசாய சங்க மாவட்ட பொரு ளாளர் கே.தங்கவேல் மற்றும் நிர்வா கிகள் என்.ஆறுச்சாமி, ஆர்.ராதா கிருஷ்ணன், நடராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். இதைத்தொ டர்ந்து, இம்மாநாட்டில் சங்கத்தின் ஒன்றிய தலைவராக பி.நடராஜ், செயலாளராக காளப்பன், பொரு ளாளராக கணேசன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில், மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி மாநாட்டை நிறைவு செய்து உரை யாற்றினார்.
தீர்மானங்கள்
முன்னதாக, பாரதியார் பல் கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு எதிராக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை மாவட்ட ஆட்சியர் கடந்த மே 5 ஆம் தேதியன்று பி.ஆர்.நடராஜன் எம்பி., முன்னிலையில் விவசாயி களிடம் உறுதியளித்தபடி உடனே திரும்ப பெற்று உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தேங்காய் விலை கடும் வீழ்ச்சியில் உள்ள நிலையில் அரசே தேங்காய்களை கொள்முதல் செய்திட வேண்டும். காட்டு பன்றிகளை கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண் டும். தொண்டாமுத்தூர் பகுதியில் எண்ணெய் உற்பத்தி நிலையம் துவக்க வேண்டும். நொய்யல் ஆற் றில் கழிவுநீர் கலப்பதை முழுமை யாக தடுத்து நிறுத்த வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.